கவிதை
தம்பி… அறிமுகம்
நான்.
பேச்சில் தமிழே உயர்வாக பிறந்தேன் தஞ்சை மாவட்டம். மூச்சில் முழக்கம் தமிழாக. முயன்றேன் கற்க இலக்கணமே. வீச்சில் தமிழே உரையாக வீறு கொள்வேன் கவியரங்கம். தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே தேன்த மிழையே பரப்பிடுவேன். கற்றேன் தமிழை இனிதாக கனியின் சுவையை உணர்ந்தேனே. நற்ற வைச்சொல் வேன்நன்றாய் நம்த மிழின்வு யர்வினையே. பற்றெ னப்பற் றினேன்தமிழை. பாக்கள் வடித்தே மகிழ்ந்தேனே. உற்ற உறவாய் தமிழர்கள் உயர்வும் பெறவே உதவிடுவேன். கவியாய் மலர்ந்த சிந்தனைகள் கற்றால் வாழ்வில் உயர்ந்திடவே. கவிவி தைகவி தைநூலே. கற்றோர் வாழ்த்த மகிழ்ந்தேனே. செவியில் தமிழால் இன்புறவே சேவை என்றும் தமிழுக்கே. புவியில் இவனும் தமிழுக்காய் புரிந்தான் தொண்டு வாழ்த்திடவே. கவிஞர் கோவிந்தராசன் பாலு தொடரும்

புதுக் கவிதை
காதல் சங்கீதமே
உச்சந்தலை வருடி உரசும் காற்றில்
அருகினில் வந்து உரையாடி உறவாகி
வெட்கம் பூசி முகமது சிவக்க
வில்லாய் வலைக் கரம் வளைத்து,
பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டி
விரல் தீண்ட விரதமும் தீரும்!
ஹைக்கூ
மலர்வனம் 8
ஹைக்கூ
ஷர்ஜிலா ஃபர்வின்-
மழைத்துளிகளை
சுமந்து கொண்டிருக்கும்
கார்காலச் சிலந்தி வலை. -
இலையுதிர்காலக் கிளை
தண்டுகளெல்லாம் மின்னுகிறது
வைகறைப் பனி. -
வானத்தில் நாற்று நட
கால்களைப் கவ்விப் பிடிக்கும்
சேற்று வயல்.
மின்னிதழ்
மலர்வனம் 7
ஹைக்கூ
வஃபீரா வஃபி01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை
02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்
03.
» Read more about: மலர்வனம் 7 »அறிமுகம்
வாழ்வி(ய)ல் வசந்தம்!
உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!
என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!
மரபுக் கவிதை
யாசக வாசலிலே…
இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?
தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை.
புதுக் கவிதை
காடுகள்
காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.
காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.
இலக்கணம்-இலக்கியம்
கவிதைக்கழகு இலக்கணம் – 20
தொடர் 20
வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.
இது 3 ஆவது பாவகை
மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா
நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா
ஆனால் கலிப்பாவில்
காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது
கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.
» Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20 »