புதுக் கவிதை

பெண்ணான வெள்ளிப்பூ

சீற்றமிகு கண்ணகியும்
பொறுமையாய் இருந்தவளே
தூற்றுகின்ற செய்கைகண்டு
துர்க்கையாய் மாறினாளே..
ஆற்றல் மிகு மொழி கூட்டி
போற்றும் வழி மலர்ந்தாளே
மாற்றம் ஒன்று வேண்டுமென
மதுரைக்குள் நுழைந்தாளே..

 » Read more about: பெண்ணான வெள்ளிப்பூ  »

புதுக் கவிதை

பேரொளி பிறந்தது!

பேரொளி பிறந்தது
காரிருள் மறைந்தது!

பாரெலாம் தீன் ஒளி
பரவிப் பளிச்சிடப்
பூரணமாகி யோர்
புத்தொளி பிறந்தது!
காரணர் முஹம்மத்
எனுமொரு குழந்தை
ஆமினா வயிற்றில்
அழகாய்ப் பிறந்தது!

 » Read more about: பேரொளி பிறந்தது!  »

புதுக் கவிதை

அழகிய மணாளன்..

மழைக்கால ஓரிரவில்..
உதிர்த்துக் கொண்டிருந்தது
வெண்ணிறப் பூக்களை மேகம்..

உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன்
பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்..
காரணம் தேடும் மனம்
ஊர் சுற்ற..

 » Read more about: அழகிய மணாளன்..  »

புதுக் கவிதை

கன்னியின் கண்ணீர்

காலம் கனியுமா
கனவுகள் பலிக்குமா
கவலைகள் கலையுமா
கன்னி மனம் மகிழுமா!!

தண்ணீரில் மீன்
அழுதால் தெரியுமா
கண்ணீரில் போடும்
கோலம் நிலைக்குமா!!

 » Read more about: கன்னியின் கண்ணீர்  »

புதுக் கவிதை

கவிதை: விரதம்

தெலுங்கில் எழுதியவர்: உஷா துரகா

காருக்குக் குறுக்கே வந்தவனை
வாய் வலிக்கத் திட்டிய அரைமணிக்கு
அன்று மௌன விரதம் இருப்பது
நினைவு வந்தது

இரண்டாவது குலாப்ஜாமூன்
தொண்டைக்குள் இறங்கும்போது
அன்று உபவாச தீட்சை இருப்பது
நினைவு வந்தது

ஹாய்…குட் மார்னிங்..

 » Read more about: கவிதை: விரதம்  »

அஞ்சலி

உனக்கு ஏது உறக்கம்.?

தோன்றிய கால முதல் தூண்டாய்
மணி விளக்காய் தோன்றிய.
தமிழ்த் தாயின் தலைமகனே.
குமணன் தலை கொடுக்க முன்வந்தான்
நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய்
புறநானூறு அகநானூறு ஆக
மொத்தம் எண்ணூறு என
எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
சங்கத் தமிழின் சங்கதிகளை
சரித்திரமாய் சொன்னவன் நீயே
மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு
கோடு கிழித்த வள்ளுவனுக்கு
வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே
உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே
மூட நம்பிக்கையை முட்டித்தள்ள
முழு வீச்சில் முயன்றவனே
சினிமாக்கள் அறியாமையை விதைத்தபோது
வாழ்க்கையின் யதார்த்தத்தை அறிவோடு கலந்தவன் நீயே
கதா கலட்சமாக கவி அரங்குகள்
காட்சி அளித்தபோது கவி
அரங்குகளில் புரட்சி செய்த புதுமையாளனே
கழிக்க முடியாத கடன் பிறப்புகளை
பெற்ற கலைஞரே.

 » Read more about: உனக்கு ஏது உறக்கம்.?  »

அஞ்சலி

பரிதி

தீப்பிழம்பில் குளித்தெழுந்த தீந்தமிழே!
தெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே!
தமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே!
செங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே!
எங்கள் சேது சமுத்திரமே!

சாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம்
சித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே!

 » Read more about: பரிதி  »

By நவீனா, ago
புதுக் கவிதை

நீதான் எந்தன் நிழல்

மௌனப் புன்னகை
கொட்டிய
உந்தன் வதனத்திலிருந்து
ததும்பி ஓடும்
அன்பின் வாசனையை
அள்ளிக் குடிக்கிறேன்…
அது
நீண்ட சஞ்சரிப்போடு
எந்தன் கரங்களில் நசிபட்டு
என்னைத் தாண்டி
நெடுதூரம் ஓடியது
ஆனந்தச் சாயல்கள்…

 » Read more about: நீதான் எந்தன் நிழல்  »

புதுக் கவிதை

தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை

தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை

என் தேசத்தில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வாய்
எனக்கான சந்ததிகளில்
விழிகள் நிறைய
கண்ணீரோடு கையேந்தும்
சிறுவர்களின் கெஞ்சலும்

தோல்சுருங்கி
கைவிடப்பட்ட மூதாட்டியின்
முனகலோடும்

நடுங்கும் கைகளில்
கைத்தடியின் ஆதரவில்
கால்இடறி ஆதரவின்றி
விழப்போகும் முதியவரிடமும்
தேடுகிறேன்
வறுமையற்ற வாழ்வை.

 » Read more about: தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை  »

புதுக் கவிதை

யாரைத்தான் நம்புவதோ…

உண்மைகளுக்குள்
உண்மைகளைத் தோடும் உலகம்
ஊமையாகிப் போன நேர்மைகள்
தோற்றம் அளிக்கின்றன துரோகங்களாக!

பொய்களுக்கு அளிக்கப்படும்
அலங்கார்த்தில் தான்
எத்தனையே அற்புதங்கள்
மெய்கள் இங்கே முதிர்க்கன்னிகளாக

வாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள்
வாசிப்பதற்கு மாத்திரமே
உள்ளங்களில் ஊன்றப்படும்
உவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே!

 » Read more about: யாரைத்தான் நம்புவதோ…  »