மரபுக் கவிதை

பிரியமான புத்தாண்டு!

பிறக்கப் போகும் புத்தாண்டு
. பிரிய மான புத்தாண்டு
பறந்து வந்து வானத்தில்
. பரிதி யாகப் பூத்திடுமே !
சிறந்த பலன்கள் இதற்குண்டு
. செப்பு கின்றாள் காதுகளைத்
திறந்து வைத்துக் கேளுங்கள்
.

 » Read more about: பிரியமான புத்தாண்டு!  »

By Admin, ago
மரபுக் கவிதை

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

 » Read more about: உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே  »

By Admin, ago
தெரிந்ததும்-தெரியாததும்

வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.

வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

 » Read more about: வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!  »

By Admin, ago
தெரிந்ததும்-தெரியாததும்

தென்னம் பிள்ளை

எல்லாவற்றையும் பணத்துக்காகச் செய்யத் தொடங்கினால், பணம் இருக்கும் மனிதர்களே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பெருமைக்காகச் செய்யத் தொடங்கினால், பெருமை நிலைக்கும் மனித வாழ்வு நிலைக்காது. சின்னஞ்சிறிய செயலையும் அன்புவழிப்பட்டு செய்தால், உடல் அழிந்த பிறகும் பெயர் நிலைக்கும்,

 » Read more about: தென்னம் பிள்ளை  »

By Admin, ago
குடும்பம்

​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… !

  • நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.
  • முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும்,
 » Read more about: ​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… !  »

By Admin, ago
குடும்பம்

குந்தைகளைத் தண்டிக்கும்போது…

குந்தைகளைத் தண்டிக்கும்போது
முக்கியமாக கவனிக்க வேண்டியவை..
—————————————————————–
* குழந்தை தவறைத் திருத்திக் கொள்வதற்காக வேண்டி மட்டும் தண்டிக்க வேண்டும்….பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

 » Read more about: குந்தைகளைத் தண்டிக்கும்போது…  »

By Admin, ago
கதை

நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள்.

 » Read more about: நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்  »

By Admin, ago
கதை

தாடி ஏன்?

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான்.

‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

 » Read more about: தாடி ஏன்?  »

By Admin, ago
கட்டுரை

வலியப் போய் மாட்டிக்கிட்டேன்!

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

 » Read more about: வலியப் போய் மாட்டிக்கிட்டேன்!  »

By Admin, ago
சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிக்கலாமா?

சுதந்திரமா சிரிங்க

பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.

ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்…

முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்….

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்….

 » Read more about: கொஞ்சம் சிரிக்கலாமா?  »

By Admin, ago