மஞ்சத்தின் பரிசு
வண்ணச் சேலைகட்டி வந்து நின்று,
தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு,
பின்னல் சடையாடக் கோபங் கொண்டு,
தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள்.
வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு,
பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,
வண்ணச் சேலைகட்டி வந்து நின்று,
தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு,
பின்னல் சடையாடக் கோபங் கொண்டு,
தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள்.
வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு,
பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,
துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர் நன்றே விதியால் நலிந்தோம் என்றே! இன்பம் உற்றோர் ஏனோ விதியை எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை! மதியைக் கொண்டு வறுமை போக்கி சதியை வெல்லல் விதியின் செயலே! முன்னைப் பிறப்பில் முடித்த வினைகள் மண்ணில் ஆன்மா மீண்டும் மலர்ந்தால் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்! பாடி இனிமைப் படைக்கும் ஐயா நல்லார் புரிந்த நன்னெறி வினைகள்! பொல்லார் புரிந்த புன்மைச் செயலால் வாடிக் கிடப்பர் Read more
உலகம் எங்கும் படர்ந்த கூட்டம்
தமிழர் கூட்டம் – என்றும்
ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும்
புனிதக் கூட்டம்!
அண்டை, மேலை நாடு தோறும்
உழைக்கும் கூட்டம்! – என்றும்
பொன்னும் பொருளும் நிறைந்தாலும் போற்றும் அருளால் சிறந்தாலும் மின்னும் கல்வி இல்லாரை மேன்மை யாக எண்ணாரே! எண்ணும் எழுத்தும் கண்ணாகும் ஏனைக் கலைகள் பொன்னாகும்! மண்ணில் நன்றாய் வாழ்தற்கு வளரும் கல்வி பெறுவோமே! கல்வி அழகே அழகாகும் கற்க கற்க சுவையாகும்! செல்வத் துள்ளே அழியாத செல்வம் அதுவே! அறிவோமே!
பேரீச் சம்போல் சுவைகூட்டி,
பெரியோர் சொன்ன நெறிகாட்டி,
மாரி பொழியும் குளிராக
மனமே சிலிர்க்கக் கவிதீட்டி,
பாரி வள்ளல் கொடைபோல
வாரித் தமிழைப் படைத்திடுமே!
பாரீச் நகரில் பைந்தமிழைப்
பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!
மானம் காக்கும் அறநெஞ்சம் – உலக
மனத்தைக் கவரும் அறநெஞ்சம்
ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் – நலம்
இயற்றும் கடமை கெடாநெஞ்சம்.
நீதி வகுத்த நன்நெஞ்சம் – சங்க
நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம்
ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் – வேறு
அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?