கவிதை

மறவாதீர்

மலர்தொறும் நாடி மலிவுற வுண்டு மகிழ்வுறும் வண்டினம் போலக் கலைமொழிப் பண்பின் பலதிறங் கண்டு களிபெற வலம்வரு பெரியீர்! நலங்கொள வேண்டி நவின்றனன்! நீர்தாம் நாடிய நாடெது வெனினும் தலைமுறை யாகப் புகழுற வாழ்ந்த தமிழ்க்கலை மறக்கலிர் என்றும்!

By செவ்வேள், ago
கவிதை

விதி

சொத்து! சொத்து!! என்றே நாட்டை முற்றும் சுரண்டி மூட்டை கட்டிச் சுற்றும் மனிதா! சுழலும் விதியால் அற்றுப் போகும் அமைத்த வாழ்வே! கண்ணில் பட்ட காட்சிகள் தம்மை எண்ணிப் பார்த்தே எழுதினேன் கவியே!

கவிதை

விதி

துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர்
நன்றே விதியால் நலிந்தோம் என்றே!
இன்பம் உற்றோர் ஏனோ விதியை
எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை!
மதியைக் கொண்டு வறுமை போக்கி
சதியை வெல்லல் விதியின் செயலே!

 » Read more about: விதி  »

கவிதை

தமிழர் கூட்டம்

உலகம் எங்கும் படர்ந்த கூட்டம் தமிழர் கூட்டம் - என்றும் ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும் புனிதக் கூட்டம்! அண்டை, மேலை நாடு தோறும் உழைக்கும் கூட்டம்! - என்றும்

கவிதை

அறிவோமே

பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
போற்றும் அருளால் சிறந்தாலும்
மின்னும் கல்வி இல்லாரை
மேன்மை யாக எண்ணாரே!

எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
ஏனைக் கலைகள் பொன்னாகும்!
மண்ணில் நன்றாய் வாழ்தற்கு
வளரும் கல்வி பெறுவோமே!

 » Read more about: அறிவோமே  »

கவிதை

சுடர்க தமிழ்நெஞ்சம்

பேரீச் சம்போல் சுவைகூட்டி, பெரியோர் சொன்ன நெறிகாட்டி, மாரி பொழியும் குளிராக மனமே சிலிர்க்கக் கவிதீட்டி, பாரி வள்ளல் கொடைபோல வாரித் தமிழைப் படைத்திடுமே! பாரீச் நகரில் பைந்தமிழைப் பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!

கவிதை

தமிழ்நெஞ்சம்

மானம் காக்கும் அறநெஞ்சம் - உலக மனத்தைக் கவரும் அறநெஞ்சம் ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் - நலம் இயற்றும் கடமை கெடாநெஞ்சம். நீதி வகுத்த நன்நெஞ்சம் - சங்க நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம் ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் - வேறு அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?