கவிதை

ஓர் ஊமையின் பாடல்!

செயற்கையாகிப் போன புன்னகையைக் கண்டு தாழ்வு உணர்ச்சிகள் நீளுகின்றன! விரக்தியின் உச்சப் படியில் நின்று கதறி சோகமாய் முகாரி இசைக்கிறது என் இயலாமை!

நூல்கள் அறிமுகம்

கவிதைகளுடனான கைகுலுக்கல் – ஒரு பார்வை

kavithaikaluudaana_kaikulukkal

இது பயனளிக்கும் ஓர் ஆவணம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ”கவிதைகளுடனான கைகுலுக்கள் – ஒரு பார்வை” என்ற இந்த நூல் வித்தியாசமானதும் வருங்காலத்தில் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஓர் ஆவண நூலாகவும் திகழும் என்பதிலும் ஐயமில்லை.

 » Read more about: கவிதைகளுடனான கைகுலுக்கல் – ஒரு பார்வை  »

புதுக் கவிதை

இரட்டை மலர்

மொட்டிரண்டுப் பூத்திருக்கு
முறுவலையே காட்டிருக்கு,
கட்டிவெல்லக் கன்னமதில்
கனிமுத்தம் நாட்டிருக்கு.

சின்னஞ்சிறு பூக்களிங்கே
சித்திரமாய்ச் சிரித்திருக்கு,
வண்ணமலர்க் கோலமிட்டு
வானமதைப் பறித்திருக்கு.

பட்டுப்போன்ற மென்மையிலே
பளபளப்பாய்ப் பார்த்திருக்கு,

 » Read more about: இரட்டை மலர்  »

கவிதை

காற்றாடியின் இலட்சியப் பயணம் …

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது உறுதி கொண்டு விண்ணை நோக்கியது உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது நம்பிக்கை ஒளி கொந்துதலால் தும்பிக்கை பலம் உந்துதலால் எம்பி எம்பி உயர எழுந்தது எதிர்படு இடர்களை கடந்தது எதிர்நோக்கு உச்சியை எய்தது

நூல்கள் அறிமுகம்

மகரந்தம் தேடும் மலர்கள் & புத்தகம் சுமக்கும் பூக்கள்

தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து, தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார். இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும் ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.

கவிதை

தமிழர் திருநாள் திராவிடர் திருநாளல்ல‌

தமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை திசையெட்டில் வாழ்வதற்கு விடவே வேண்டாம் தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும் தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில் திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்

கவிதை

பொங்கலோ பொங்கல் ..!

ஏர் தந்த சீதனத்தை பார் கண்ட எளியவர்க்கு கார் கொண்ட உள்ளத்தால் சீர் கொண்டு பகிர்ந்தளித்து பொங்கிடும் அவர் புன்னகையில் புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!

மரபுக் கவிதை

சொல்வாய் நீயே!

மாக்கோலம் போடுகின்ற மங்கையே – உன்
மனக்கோலம் என்னாயிற்று சொல்வாயே!
கலர்க்கோலம் போடுகின்ற காரிகையே – உன்
கனவுக்கோலம் என்னாயிற்று சொல்நீயே!

அதிகாலைத் துயிலெழுந்த அழகியே –

 » Read more about: சொல்வாய் நீயே!  »

கவிதை

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே !

கவிதை

நிலம்வணங்கும் பொங்கல்

மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது