கவிதை

உழைப்பு

மலர்பறிக்கும் கைகளில்
மண்வெட்டி , என்றும்
மணம்பரப்பும் தலையில்
கல்சட்டி , விரிந்து
மைவைக்கும் கண்ணில்
புதுமிரட்சி , புதிதாய்
நகைவைக்கும் இதழில்
நாவறட்சி ,

 » Read more about: உழைப்பு  »

கவிதை

உன்ன யெண்ணி ஏங்க வச்சே

நான் கோயிலுக்கு
நடந்து போகயிலே

எந்தன் எதிரே வந்து
தரிசனம் தந்தவளே

நான் முதல் முதலா
உன்னை பார்த்தேன்

எந்தன் விழிகளிலே
உன்னை சேர்த்தேன்

காதலோடு பூவெடுத்து
பூமாலை கோர்த்தேன்

நெத்தியில நீதானே
பொட்டு ஒன்னு வைச்சே

ஊசி நூலு இல்லாம
ஏன்டி எம்மனச தைச்சே

ஏறெடுத்து பார்த்தில்ல
நான் இதுவரை பெண்ணே

தினமும் உன்னயெண்ணி
ஏங்க வச்சே ஏன்டி கண்ணே!

 » Read more about: உன்ன யெண்ணி ஏங்க வச்சே  »

கவிதை

நம்முறவின் பரிணாமம்

திரும்பி எடுக்க முடியா
உன் ப்ரியங்கள்
மனக்குகைக்குள் அமிழ்ந்து
விட்ட சந்தங்கள்..
காதல் இங்கு நம் மந்திரம்
விதி வரைந்ததோ நம் பந்தம்..

மனக்காயத்தை ஆற்றுகின்ற
மகிழ்வான பொழுதுகள்
நம் உறவின் சாட்சிகள்
என்றும் மாறாத காட்சிகள்..

 » Read more about: நம்முறவின் பரிணாமம்  »

கவிதை

என்றாலும் நான் எழுவேன்!

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி
வரலாற்றில் கடைநிலையில்
என்னை நீ எழுதலாம்;
அழுக்குக்குள் தோயும்படி
அழுத்தமாய் மிதிக்கலாம்
என்றாலும் நான் எழுவேன்,
சிறு புழுதியைப் போல!

 » Read more about: என்றாலும் நான் எழுவேன்!  »

கவிதை

சொக்குப்பொடி

சுண்ணப்பொடி சுகந்தப்பொடி
சுந்தரியின் எண்ணப்படி.
வண்ணப்பொடி வசந்தப்பொடி
வந்திருக்கும் சொர்ணப்பொடி.

கோலப்பொடி கொஞ்சும்படி
குலமகளை விஞ்சும்பொடி,
சாயப்பொடி சாந்துப்பொடி
சரியவைக்கும் சந்தனப்பொடி.

மஞ்சள்பொடி மகிழும்படி
மங்கைப்பூச மருதாணிப்பொடி,

 » Read more about: சொக்குப்பொடி  »

கவிதை

வரதட்சணை

சுற்றமுடன் வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார்
சுகமானப் பாட்டுதனைப் பாடக் கேட்டார்
கற்றிட்ட கல்வியினைப் பணியைக் கேட்டார்
கால்களினை நடக்கவிட்டே ஊனம் பார்ததார்
பெற்றவர்கள் சொத்துகளைச் சரியாக் கேட்டார்
பெயரளவில் சிற்றுண்டி சுவைத்த பின்னர்
சற்றேனும் நெஞ்சமதில் ஈர மின்றிச்
சரியாக தட்சணையை எடுத்து ரைத்தார் !

 » Read more about: வரதட்சணை  »

கவிதை

ஐம்புலனை தூண்டிவிடும் நங்கையிவள்

மாங்கனி தாங்கிய மங்கை -இவள்
மதுத்துளி இதழில் தேங்கிய கங்கை
தேன் கனி தடவிய கன்னம்
ஆண் கனி தேடுற வண்ணம்

விழிகளிரண்டும் கணைகள் பாய
புது கவிதை சொல்லும்
மெல்லிடையில் உடைகள்
தழுவக் கண்டால்
விரல்கள் கவலை கொள்ளும்

செவ்விளநீர் தங்குமிடம்
பொங்கி வரும் தங்க குடம்
தங்கிவிட மெய் மறந்து
ஐம்புலனை தூண்டிவிடும்
நங்கையிவள் ஒரு தேன் கவிதை

 » Read more about: ஐம்புலனை தூண்டிவிடும் நங்கையிவள்  »

கவிதை

கவலைக்குரிய காலமாற்றம்!

ஒற்றைச் சேலையில்
தாலாட்டுக் கேட்ட
ஒருதாய் வயிற்று
உறவுகளெல்லாம்
ஒன்றுவிட்ட
சகோதரர்கள் போலானது !

ஒரு பாயில்
தூக்கம் பகிர்ந்த
ஒன்றுவிட்ட சோதர
சொந்தங்கள் தூரத்து
உறவு என்றானது!

 » Read more about: கவலைக்குரிய காலமாற்றம்!  »

கவிதை

மனிதம் மரணித்துப் போனது

ஒரு
சுற்றுப் பார்வையில்
உயிரே போய்விடும்
போல் இருக்கிறது
மனிதம் மரணித்துக்
கொண்டிருக்கும் மண்ணை
எண்ணுகையில்.

இயற்கை
அனர்த்தத்தின்
இழப்புக்களை கூட
இனத்துவேசத்துடன்
நோக்கும் மனநிலைக்கு
கடந்த காலத்தை
வடுக்களாக வரைந்து
சென்றிருக்கிறது
வரலாறு.!

 » Read more about: மனிதம் மரணித்துப் போனது  »

கவிதை

மூச்சு

தமிழ் அமுதம்
அளவுக்கு மீறி அருந்தினாலும்
நீ
உயிர்ப்பாய்
இன்னும் இன்னும்

தமிழ் மங்கைக்கு
கவிதைச் சேலை கட்டுகிறேன்
அவள் அழகு
திருஷ்டி படாமலிருக்க

தமிழ்
பசு
இலக்கியப் பால் கறக்கிறேன்
கவிதைத் தயிர்
சுவைக்க

தமிழ்
சாகரம்
நான் செல்கிறேன்
எழுதுகோல் தோணி
செலுத்தி

தமிழ் மான்
அது
துள்ளிவிளையடுகின்ற
காடு
நீயும்
நானும்

இறைவா
வேண்டும்
தமிழ்க் கடலில்
நான்
ஒரு மீனாகும் வரம்

அன்னை மொழி
மறந்தவன்
வீட்டுச் சேவல் கூட
நரி

மூச்சுக்கள் ஒன்றாகிடின்
யுகம்
யுகமாய்ச் சுவாசிப்பாள்
தமிழ் அன்னை

தமிழ்
செல்வம் என்பவன்
காப்பான்
தன்
உயிர் கொடுத்தும்.

 » Read more about: மூச்சு  »