புதுக் கவிதை

கண்ணாடி

கண்ணாடி Mirror

மூலம்: சில்வியா பிளாத்
மொழியாக்கம்: தாரா கணேசன்

நான் வெள்ளியின் துல்லியமானவள்
எவ்வித முன்புனைவுகளும் அற்றவள்
காண்பதையெல்லாம் உடனுக்குடன் விழுங்குபவள்
காதலின் மூடுபனியோ அன்றி
வெறுப்போ இன்றி
கொடூரம் அற்றவளாய்,

 » Read more about: கண்ணாடி  »

புதுக் கவிதை

ஆழி சூழ் தமிழ்

இலெமூரியாவில் பிறந்தவன்
ஆழியில் உலகம் அளந்தவன்

நாற்பத்தொன்பது நாடுகளாம் குமரிக்கண்டத்தில்…..

நாதியற்று நிற்கிறான் உலகக்கண்டங்களில்..!

மயிலுக்கும்
முல்லைக்கும் …..
அள்ளிக்கொடுத்த கடை ஏழு வள்ளல்கள்
வாழ வழியின்றி காத்துக்கிடக்கிறான்
அயல்நாட்டில்
அகதியின் வாரிசுகள்…..!

 » Read more about: ஆழி சூழ் தமிழ்  »

கவிதை

கம்பன் புகழ்

1.
கவியால் கோட்டையைக் கட்டிய கம்பனின்
கால்களைத் தொட்டுத் தொழுகின்றேன்!
புவியும் செழித்திடப் பூந்தமிழ்த் தோப்பைத்
புலமை தழைக்க உழுகின்றேன்!
  
2.
விருத்தக் கவிகள் விருந்தென இன்பம்
விளைத்திடும் என்றே..நான் உண்டேனே!

 » Read more about: கம்பன் புகழ்  »

கவிதை

உண்டு!

பணஞ்சேர்க்க எண்ணுவரே அதிக முண்டு !
பணமின்றிச் செயமுடியும் செயலு முண்டு !
குணமிருந்தும் பணமின்றி இருப்போ ருண்டு !
கொள்கையிலே தோல்வியினைக் கண்டோ ருண்டு !
பணமிருந்தும் நிறைவேதான் காணா ருண்டு !

 » Read more about: உண்டு!  »

கவிதை

யாருக்கும் வாய்ப்பதில்லை !

காரிருக்கு வீடிருக்கு கையினிலும் பணமிருக்கு
பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு
என்றாலும், மனத்தளவில் என்னவோ குறையிருக்கு
எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு!

முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா
தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா
ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்
யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா!

 » Read more about: யாருக்கும் வாய்ப்பதில்லை !  »

கவிதை

உனக்கான கரை

உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.

 » Read more about: உனக்கான கரை  »

இலக்கணம்-இலக்கியம்

கவி, கவிதை, கவிஞர் இவை தமிழா? வடமொழியா?

“கவி, கவிதை. கவிஞர்” இவை தமிழா? வடமொழியா?

“கவி ” வடமொழி என்று அண்மையில் அன்பர் ஒருவரின் கருத்தைப் படிக்க நேர்தது. அருளியாரின் கூற்றையும், பாவாணரின் ஆய்வையும் சுட்டிக் காட்டினார்.

மேலும்,

 » Read more about: கவி, கவிதை, கவிஞர் இவை தமிழா? வடமொழியா?  »

கவிதை

வருவாய் நிலவே!

நீலவானில் நீந்துகின்ற நிலவே நிலவே – என்
நித்திரையைக் களைத்ததென்ன நிலவே நிலவே!
நீலமலர் ஆடைகட்டி வந்தாய் நிலவே – என்
நெஞ்சத்தில் மகிழ்ந்தாட வருவாய் நிலவே!

தனிமையிலே தவழ்கின்ற தங்க நிலவே –

 » Read more about: வருவாய் நிலவே!  »

கவிதை

இராவணன் !!

இறை வணக்கம் !

தங்கத் தமிழை அளித்திட்ட
தமிழின் தலைவா முதல்வணக்கம் !
எங்கும் மணந்து கமழ்கின்ற
எழிலே தமிழே என்வணக்கம் !
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
சான்றோர் தமக்கும் தலைவருக்கும்
அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும்
அவைக்கும் என்றன் நல்வணக்கம் !

 » Read more about: இராவணன் !!  »

கவிதை

தொடமுடியா சரித்திரமே…

அகரத்திற்கோர் பெருமை
நின் பெயரின் முதலெழுத்தை
முதல் எழுத்தாய்க் கொண்டதால்!

ஆக்கத்தின் திறவுகோல்
நின்னணுக் கரங்களிலும்
மழலைப் புன்னகையிலும்!

இந்திய தேசம் கண்டெடுத்த
விஞ்ஞானப் புதையல் நீங்கள்!

 » Read more about: தொடமுடியா சரித்திரமே…  »