கவிதை

முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த
அஞ்சாத நெஞ்சினரே வாழி!
கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ்
நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி!

முத்துவேலர் பெற்றெடுத்த
முத்தமிழின் பெட்டகமே வாழி!
கத்துகடல் அலையனைத்தும்
கவறிவீச கலைஞரே வாழி!

 » Read more about: முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!  »

கவிதை

பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க
பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை
கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக்
கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து
காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில்
கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் ,

 » Read more about: பாட்டெழுதும் பாவலன் கை  »

கவிதை

சூனியப்புள்ளி

அந்த சூனியப்புள்ளிக்கு
இப்போது சில வருடங்கள்
வயதாகிறது

வளர்ந்து பருத்த அதற்கு
அற்ப ஆயுள் இருக்க
கூடாதா என நான்
கேட்டுக்கொள்கின்றேன்

ஒரு உறுதியான
நிலைத்த புள்ளியில்
வாழத்தெரிந்த அதை
பார்த்து வியக்கின்றேன்

என்னோடு வாழ்ந்து வளர்ந்து
எனக்கே போட்டியாகும்
என் நிழலென
வளரும் அதற்கும்
என் ஆயுள் வரை தான்
வயதாகும்
சந்தேகமே இல்லை

 » Read more about: சூனியப்புள்ளி  »

கவிதை

இன்னொரு அவள்

60453மாறி கால இரவொன்றில்
பிரயத்தனமின்றி சுமக்கும்
மிகையான குளிரில்

அவள் நிர்மலமான
நொடிகளை ஒவ்வொன்றாய்
கடக்கும் போது

தனிமைத் தீர்க்க வந்த
இன்னொரு அவள்

கவிதைகள் பற்றிய
கோணங்களை வட்டங்களுக்குள்
அடக்குகிறாள்

சில்லரைத்தனமான
சொற் சேர்க்கை வெறும்
பேச்சுகள் என்றும்

அகராதி மறைத்த
செறிவான பதங்கள்
கொண்டு ஆழந்த
அர்த்தங்களாயும்
சிலேடைகளாயும்
மர்மங்களாயும்
சுருக்கியும் விரித்தும்
சுவாரசியமாகவும்

புனைவதன் சிறப்பை
விபரித்துக் கொண்டே

அவள் சொல்லும் கவிதையை
நான் எழுதிக்கொண்டிருந்தேன்

முடிவில் சிறந்த கவிக்கான
பட்டத்தை நான்
வாங்கிக் கொண்டிருக்க
இன்னொரு அவளான அவள்
எனக்குள் அடங்கி
குதூகலித்துக் கொண்டிருந்தாள்

 » Read more about: இன்னொரு அவள்  »

கவிதை

உழைப்பு

மலர்பறிக்கும் கைகளில்
மண்வெட்டி , என்றும்
மணம்பரப்பும் தலையில்
கல்சட்டி , விரிந்து
மைவைக்கும் கண்ணில்
புதுமிரட்சி , புதிதாய்
நகைவைக்கும் இதழில்
நாவறட்சி ,

 » Read more about: உழைப்பு  »

கவிதை

உன்ன யெண்ணி ஏங்க வச்சே

நான் கோயிலுக்கு
நடந்து போகயிலே

எந்தன் எதிரே வந்து
தரிசனம் தந்தவளே

நான் முதல் முதலா
உன்னை பார்த்தேன்

எந்தன் விழிகளிலே
உன்னை சேர்த்தேன்

காதலோடு பூவெடுத்து
பூமாலை கோர்த்தேன்

நெத்தியில நீதானே
பொட்டு ஒன்னு வைச்சே

ஊசி நூலு இல்லாம
ஏன்டி எம்மனச தைச்சே

ஏறெடுத்து பார்த்தில்ல
நான் இதுவரை பெண்ணே

தினமும் உன்னயெண்ணி
ஏங்க வச்சே ஏன்டி கண்ணே!

 » Read more about: உன்ன யெண்ணி ஏங்க வச்சே  »

கவிதை

நம்முறவின் பரிணாமம்

திரும்பி எடுக்க முடியா
உன் ப்ரியங்கள்
மனக்குகைக்குள் அமிழ்ந்து
விட்ட சந்தங்கள்..
காதல் இங்கு நம் மந்திரம்
விதி வரைந்ததோ நம் பந்தம்..

மனக்காயத்தை ஆற்றுகின்ற
மகிழ்வான பொழுதுகள்
நம் உறவின் சாட்சிகள்
என்றும் மாறாத காட்சிகள்..

 » Read more about: நம்முறவின் பரிணாமம்  »

கவிதை

என்றாலும் நான் எழுவேன்!

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி
வரலாற்றில் கடைநிலையில்
என்னை நீ எழுதலாம்;
அழுக்குக்குள் தோயும்படி
அழுத்தமாய் மிதிக்கலாம்
என்றாலும் நான் எழுவேன்,
சிறு புழுதியைப் போல!

 » Read more about: என்றாலும் நான் எழுவேன்!  »

கவிதை

சொக்குப்பொடி

சுண்ணப்பொடி சுகந்தப்பொடி
சுந்தரியின் எண்ணப்படி.
வண்ணப்பொடி வசந்தப்பொடி
வந்திருக்கும் சொர்ணப்பொடி.

கோலப்பொடி கொஞ்சும்படி
குலமகளை விஞ்சும்பொடி,
சாயப்பொடி சாந்துப்பொடி
சரியவைக்கும் சந்தனப்பொடி.

மஞ்சள்பொடி மகிழும்படி
மங்கைப்பூச மருதாணிப்பொடி,

 » Read more about: சொக்குப்பொடி  »

கவிதை

வரதட்சணை

சுற்றமுடன் வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார்
சுகமானப் பாட்டுதனைப் பாடக் கேட்டார்
கற்றிட்ட கல்வியினைப் பணியைக் கேட்டார்
கால்களினை நடக்கவிட்டே ஊனம் பார்ததார்
பெற்றவர்கள் சொத்துகளைச் சரியாக் கேட்டார்
பெயரளவில் சிற்றுண்டி சுவைத்த பின்னர்
சற்றேனும் நெஞ்சமதில் ஈர மின்றிச்
சரியாக தட்சணையை எடுத்து ரைத்தார் !

 » Read more about: வரதட்சணை  »