மரபுக் கவிதை

தென்றல்விடு தூது!

தென்றல் அவள் மேலாடை

தென்றல் அது தாலாட்ட
மேலெழுந்த அவள் நூலாடை
முக்காடாய் அவன் முகம் வருட

வசியம் செய்யும் அவள் வாசம்
சுவாசமாய் அவன் நாசிபுக
முழுதாய் அவளை முழுங்கிவிட
அனுபவக் காற்றை தூதுவிட்டான்

எடுத்திடவோ கொடுத்திடவோ
காதல் மட்டுமே அவன் கையிருப்பாய்
மறுத்திடவோ ஏற்றிடவோ
நாணம் மட்டுமே அவள் தவிப்பாய்

மண்ணில் திரியும் நிலவுமகள்
கண்ணுக்குள் அவனைக் குவிக்க
இடை புகுந்த துணைக் காற்று
எட்டப்பனாய் காட்டிக் கொடுத்தது

நடுவில் படர்ந்த நடைதூரம்
நாலடிக்குள் சுருங்கி அருங்கி
தடைத் தகர்த்து இடைத் தூர்ந்து
இடைப் பற்றியது மன்மதக் கரம்

உடைப்பற்றிய ஊதக் காற்று
மடைத்திறப்பிற்கு கற்பூரம் காட்டி
விடைத் தெரியா இனபத் தவிப்பிற்கு
படையல் போட்டு பசியாற்றியது!

 » Read more about: தென்றல்விடு தூது!  »

புதுக் கவிதை

பீனிக்ஸ் கட்டிய கூடு

krish-houseவீடு கட்டும் எண்ணம் எப்படி வந்தது எனக்கு?
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில்[1988] அல்லாடும் நிலையிலும்
தனிக் குடும்பம் கண்ட தவிப்பாலா?
வாடகை வீடுகளில் வதைப்பட்ட வரலாறாலா?

 » Read more about: பீனிக்ஸ் கட்டிய கூடு  »

புதுக் கவிதை

அகழ்வாராய்ச்சி!

வாழ்க்கைச் சக்கரம் பலகாதம் சுழன்று
காதோரம் நரைத்தட்டி காய்ப்புகளேறி வடுவாய்…
உள்ளிருந்து உறுத்தும் புண்களை ஆற்றிட
நெஞ்சகக்கூட்டின் புதையுண்ட இளமை சுவடுகளை
நினைவேடுகளாய் புரட்டி அகழ்வாராய்ந்தான்
ஓரமாய் நனைந்துக் கிடந்தன இதய அஞ்சல்கள்….

 » Read more about: அகழ்வாராய்ச்சி!  »

புதுக் கவிதை

எதிர்பதம் சொல்பவன்

கோட்டுப்பூ
கோர்த்தெடுத்து
கூந்தலில் சூடிவிட்டு
மணம் மாறும் முன்
மனம் மாறிப்போனாய்
தொலை தேசம் வாழ்வை
தொலைத்த தேசமானது
பிரிவு கொடுத்துப்போனவன்
பிரிவின் வலியை
கூட்டிப்போக மறந்தாய்
சண்டிகை இரவுக்கு நம்
அட்சயத்தின் தீராக்கூடலின்
வெளிச்சத்தை உணவளிப்போம் வா!

 » Read more about: எதிர்பதம் சொல்பவன்  »

புதுக் கவிதை

வாழ்வியம்

பெருங்கடலைத் தாண்டி
வந்துவிட்டோம்,

தேடிவந்த எதுவுமே
இங்கில்லை…

தொலைத்தவை
தொலைந்துவிட்டன…

இனி புதியதோர் தேடலில்
தொலையலாம், வா!

கடக்க எத்தனையோ
கடல்கள் காத்திருக்கின்றன…

 » Read more about: வாழ்வியம்  »

மரபுக் கவிதை

தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!

நசையெலாம் நனவாய் நிகழ்த்திட
—– அசைமலர் அடர் நந்தவனத்தே
பூசை கொள் தலைவன் வருகைக்காய்
—– ஆசையால் அலர்விழி காத்திருந்தாள்
கண்ணனவன் கழற் கூடிடுவான்
—– முன்னமவன் செப்பிய வாக்கால்
கன்னம் வைக்கும் கைச்சிறையில்
—–

 » Read more about: தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!  »

பழங்கதை

பலன்

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.

அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்.

 » Read more about: பலன்  »

புதுக் கவிதை

ஒன்றையேனும் நிகழ்த்திவிடு

சிலிர்த்துக் கொண்டே இருக்க
உன் புன்னகை தூரலை பொழிந்துவிடு

தவித்துக் கொண்டே இருக்க
தழுவிடும் கணங்கள் தந்துவிடு

ரசித்துக் கொண்டே இருக்க
காதல் ராகம் இசைத்துவிடு

கடந்து கொண்டே இருக்க
பயணத்தின் பாதையை
பகிர்ந்து விடு

மிளிர்ந்துகொண்டே இருக்க
உன் வண்ணம் என்னில் கலந்துவிடு

தொலைந்து கொண்டே இருக்க உன் சாயலை
என்னில் சேர்த்துவிடு

நெகிழ்ந்து கொண்டே இருக்க
நிழல் நொடிகளை என்னில் நிகழ்த்தி விடு

உயிர்த்துக் கொண்டே இருக்க
உயிரினில் மூச்சாய் கலந்துவிடு

இத்தனை கோரிக்கை உன்னிடம் வைத்தேன்

ஒன்றையேனும் நிகழ்த்திவிடு

Image may contain: cloud, sky, ocean, one or more people, outdoor, water and nature  » Read more about: ஒன்றையேனும் நிகழ்த்திவிடு  »

புதுக் கவிதை

என்னருகில் நீயிருந்தால்

அழகாகும் என் இதயம்
நீ அருகில் இருந்துவிட்டால்

உன்னோடு உரையாடும்
ஒளித் தருணம் நீண்டிடுமே

சட்டெனவே சரிந்துவிழும்
என் மனதோ உன்னிடத்தில்

சத்தமில்லா பொழுதுகளில்
கரைந்திடுவோம் காற்றினிலே

வாழ்தலையும் வீழ்த்தலையும்
வரைந்திடுவாய் தூரிகையாய்

நித்தமும் என் கனவுகளை
நீ நிறைப்பாய் வண்ணங்களால்

நிலம் வீழும் நிழலெனவே
இணைந்திடுவோம் ஓருயிராய்

 » Read more about: என்னருகில் நீயிருந்தால்  »

நூல்கள் அறிமுகம்

மீண்டும் பூக்கும்

mpf“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்”

 » Read more about: மீண்டும் பூக்கும்  »