மரபுக் கவிதை

எல்லோரும் வெல்வோம்

சொத்துக்கள் சேர்ப்பதுவே வெற்றி யன்று
சொந்தங்கள் சேர்ப்பதுவும் வெற்றி யன்று
எத்தனைநாள் இப்புவியில் வாழ்ந்தோம் என்னும்
எண்ணிக்கை வெற்றியன்று வாழும் நாளில்
எத்தனைபேர் வாழ்வதற்கே உதவி செய்தோம்
என்பதுதான் வெற்றிக்குத் துலாக்கோல் தம்பி
செத்தபின்னர் இவன்போல யாருண் டென்ற
சேமிப்பே நிலையான வெற்றி யாகும்.

 » Read more about: எல்லோரும் வெல்வோம்  »

கட்டுரை

பாபருக்கும், ராமருக்கும் பகைமை என்ன?

ஒருமுறை நான் இந்தியாவுக்குச் சென்றிருந்த போது சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை திருவள்ளுவர் பஸ்ஸிலே பயணம் செய்ய நேரிட்டது. காலைநேரம். ஒருவன் தாம்பரம் வரை போக வேண்டுமென்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான். “எண்டா சாவு கிராக்கி பேமானி காலையில் நூறு ரூபா நோட்டைக் கொண்டு வந்திட்டியாடா,

 » Read more about: பாபருக்கும், ராமருக்கும் பகைமை என்ன?  »

புதுக் கவிதை

சாதிக்கு சிதை மூட்டிய செங்கமலம்!

வேப்பமர தண் நிழலில்
உதிர்ந்த மலர் வெளிர் கம்பளம் விரிக்க
வான் சொரியும் பன்னீர் துளியால்
தேன் சுரந்து வண்டுகள் கிறங்க

மார் முலைக்குள் முகம் புதைத்த
மதலையின் மணி பால் பற்கள்
தூர் பதிந்த வெண் முத்தாய்
வேர் பிடித்து உயிர் துளிர்க்கும்

ஏர் உழவன் சால் இறைக்க
விழித்த பயிர் நீர் குடிக்க
போர்களத்துச் சிப்பாய் போல்
மார்விறைத்து தோள் உயர்த்தும்

அங்கே…….

 » Read more about: சாதிக்கு சிதை மூட்டிய செங்கமலம்!  »

மரபுக் கவிதை

தேன்தமிழ் அழகு!

fb_img_1479227632649தேங்கிக் கிடக்கும்
தேன்தமிழ் அழகைத்
தேடிக் கண்டேன் அறிதாய்!
ஏங்கித் தவிக்கும்
எந்தன் நெஞ்சின்
ஏக்கம் தன்னை அறிவாய்!
தாங்கிக் காப்பேன்
தமிழே உன்னை
தடைகள் தாண்டி வருவாய்!

 » Read more about: தேன்தமிழ் அழகு!  »

மரபுக் கவிதை

தமிழ்த்தேனே

pulavar_punganeeriyaarமலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே
மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில்
கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர்
கலைத்தேனே எனவேறு மொழிக லக்க
விலைத்தேனே ஆனாயே!

 » Read more about: தமிழ்த்தேனே  »

மரபுக் கவிதை

தேனே…

செந்தமிழ்நா டென்கையிலே செவியருந்தும் தேனே!
செப்பியசீர் பாரதியின் சேதிபடித் தேனே!
எப்படியோர் மொழிக்கிந்த இனிமை? நினைந் தேனே!
பாரதிமுன் என்வினவை
கேட்கவிழைந் தேனே!
வுடன்சற்றே இந்தவிழை
விழியுமயர்ந் தேனே!

 » Read more about: தேனே…  »

மரபுக் கவிதை

தென்றல்விடு தூது!

தென்றல் அவள் மேலாடை

தென்றல் அது தாலாட்ட
மேலெழுந்த அவள் நூலாடை
முக்காடாய் அவன் முகம் வருட

வசியம் செய்யும் அவள் வாசம்
சுவாசமாய் அவன் நாசிபுக
முழுதாய் அவளை முழுங்கிவிட
அனுபவக் காற்றை தூதுவிட்டான்

எடுத்திடவோ கொடுத்திடவோ
காதல் மட்டுமே அவன் கையிருப்பாய்
மறுத்திடவோ ஏற்றிடவோ
நாணம் மட்டுமே அவள் தவிப்பாய்

மண்ணில் திரியும் நிலவுமகள்
கண்ணுக்குள் அவனைக் குவிக்க
இடை புகுந்த துணைக் காற்று
எட்டப்பனாய் காட்டிக் கொடுத்தது

நடுவில் படர்ந்த நடைதூரம்
நாலடிக்குள் சுருங்கி அருங்கி
தடைத் தகர்த்து இடைத் தூர்ந்து
இடைப் பற்றியது மன்மதக் கரம்

உடைப்பற்றிய ஊதக் காற்று
மடைத்திறப்பிற்கு கற்பூரம் காட்டி
விடைத் தெரியா இனபத் தவிப்பிற்கு
படையல் போட்டு பசியாற்றியது!

 » Read more about: தென்றல்விடு தூது!  »

புதுக் கவிதை

பீனிக்ஸ் கட்டிய கூடு

krish-houseவீடு கட்டும் எண்ணம் எப்படி வந்தது எனக்கு?
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில்[1988] அல்லாடும் நிலையிலும்
தனிக் குடும்பம் கண்ட தவிப்பாலா?
வாடகை வீடுகளில் வதைப்பட்ட வரலாறாலா?

 » Read more about: பீனிக்ஸ் கட்டிய கூடு  »

புதுக் கவிதை

அகழ்வாராய்ச்சி!

வாழ்க்கைச் சக்கரம் பலகாதம் சுழன்று
காதோரம் நரைத்தட்டி காய்ப்புகளேறி வடுவாய்…
உள்ளிருந்து உறுத்தும் புண்களை ஆற்றிட
நெஞ்சகக்கூட்டின் புதையுண்ட இளமை சுவடுகளை
நினைவேடுகளாய் புரட்டி அகழ்வாராய்ந்தான்
ஓரமாய் நனைந்துக் கிடந்தன இதய அஞ்சல்கள்….

 » Read more about: அகழ்வாராய்ச்சி!  »

புதுக் கவிதை

எதிர்பதம் சொல்பவன்

கோட்டுப்பூ
கோர்த்தெடுத்து
கூந்தலில் சூடிவிட்டு
மணம் மாறும் முன்
மனம் மாறிப்போனாய்
தொலை தேசம் வாழ்வை
தொலைத்த தேசமானது
பிரிவு கொடுத்துப்போனவன்
பிரிவின் வலியை
கூட்டிப்போக மறந்தாய்
சண்டிகை இரவுக்கு நம்
அட்சயத்தின் தீராக்கூடலின்
வெளிச்சத்தை உணவளிப்போம் வா!

 » Read more about: எதிர்பதம் சொல்பவன்  »