புதுக் கவிதை
நீறு பூத்த நெருப்பு
ஏழை மாணவர்களுக்கு
எழுத்தறிவித்த இறைவன்!
இலவச மதிய உணவுத் திட்டத்தால்
எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல
அறிவுப்பசியையும் தந்தாயே…
தென்னாட்டுக் காந்தியே… காமராசா !
பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு
சுயமரியாதை இயக்கம் கொடுத்து
சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே
வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…!