ஹைக்கூ
துளிப்பா
- சொல்லித்தந்தப் பாடம்
பதியவில்லை மனதில்
ஆசிரியை முகம் ! - எங்கள் வீட்டு தோட்டத்தில்
மலராத மொட்டு
முதிர்கன்னி. - வீட்டுவாசல் வந்து
முழம்போட்டுத் தருகிறாள்
பூக்காரி - குறைந்த கூலி
அவன் நிறைவடைகிறான்
முதலாளி.
இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10
பாடல் – 10
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.
(பொருள்) :
கணக்காயர் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 10 »இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9
பாடல் – 09
பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்
முழுமக்கள் காத லவை.
(பொருள்) :
பெருமை –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 9 »இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8
பாடல் – 08
தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் – வெல்சமத்து
வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.
(பொருள்) :
தொல் அவையுள் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 8 »இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7
பாடல் – 07
வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் – பல்லவையுள்
அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்
துஞ்சூமன் கண்ட கனா.
(பொருள்) :
வாளைமீன் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 7 »இலக்கணம்-இலக்கியம்
கம்பன் கவிநயம்… தொடர் – 8
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்;
இராமாயணக் காவியத்தில் கம்பர் இராமனை தெய்வநிலையில் இருந்து மானிடனாக இறங்கி வந்த கருணையுள்ளம் படைத்தவன் என நமக்கு தெளிவுறுத்துகிறார். வால்மீகி இராமயாணத்தில் குகனை பற்றி அவ்வளவாக கூறவில்லை.
» Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 8 »மரபுக் கவிதை
எழுகின்ற விடியல்
எழுகின்ற விடியலிலே இனிமை வேண்டும்
ஏரியிலே தூயதண்ணீர் ஓட வேண்டும்
உழுகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும்
உணவினிலே விடங்கலக்கா தர்மம் வேண்டும்
இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
குடும்பம்
சிறுவர்கள் உலகம்
சிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்
சாதனை படைக்கும் தனி உலகம்
வறுமையின் துயரம் உடன் விலகும் – புது
வசந்தங்கள் தந்தே பூ மலரும்!
இது மழலைகள் பருவம்
சின்ன நிலவுகள் உருவம் – என்றும்
பாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…
இலக்கணம்-இலக்கியம்
திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6
பாடல் – 06
பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் – அறவினையைக்
காரண்மை போல வொழுகுதலும் இம்மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு.
(பொருள்) :
பிறர் –
» Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 6 »