கவிதை
பாதமே வேதம்
உந்தன் பாதம்
எந்தன் வேதம்,
உந்தன் கொலுசு
எந்தன் இன்னிசை.
ஆடும் கால்கள்
ஆனந்த ஊற்று,
ஓடும் பரல்கள்
உயிரின் ஓசை,
வண்ணப் பூச்சு
வடிவின் வீச்சு,
உந்தன் பாதம்
எந்தன் வேதம்,
உந்தன் கொலுசு
எந்தன் இன்னிசை.
ஆடும் கால்கள்
ஆனந்த ஊற்று,
ஓடும் பரல்கள்
உயிரின் ஓசை,
வண்ணப் பூச்சு
வடிவின் வீச்சு,
மார்கழிப் பனிப்பொழிவு மெல்லக் குறைந்திட
ஊர்முழுதும் செங்கரும்புகள் காட்சியளிக்க
வார்த்தெடுத்த புதுப்பானைகள் பொலிவாக
சேர்குழலியாய் தைமகள் தரணி வருகிறாளே…
மழைமகள் குறைவாக அருளிய மழையிலும்
பிழையில்லா விளைச்சல் நெல் வீடு வரவே
உழைத்த உழைப்பின் பயன் உழவருக்கென்றாக
பிழைக்கும் பிழைப்புக்கு நன்றி சொல்லிடவே…
தழைக்கவே வந்தாள் தரணியில் தைப்பெண்
தமிழும் செழிக்கத் தலைமகள் வந்தாள்!
எங்கும் பொதுமை ஏற்கும் வண்ணம்
தங்க ஒளியை தந்த கதிரோன்!
பொங்கும் மகிழ்வு புதுப்புதுப் பானையில்
பொங்கலோ பொங்கல் பூமிப் பந்தில்!
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் கூட்டரங்கில் மஹாகவி ஆசிரியர் வதிலை பிரபா வாசித்த குதிரையாளி நூல் ஆய்வுரை:
குதிரையாளி சிங்க முகம் கொண்ட கற்பனை விலங்கு.
» Read more about: குதிரையாளி »
இரும்பைத்தான் காந்தம் கவரும். இனிமையால் கவர்ந்தவர், அன்பால் தன் மக்களின் ரத்தத்தின் ரத்தத்தில் கலந்தவர்.
நீதிக்குத் தலைவணங்கச் சொன்னவரிடம் நீதியே தலைவணங்கியது எனலாம்.
தாய்க்குத் தலைமகனிடம் தாய்க்குலங்களே எங்கள் வீட்டுப்பிள்ளையாக்கிக் கொண்டனர் இவரை.
» Read more about: எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல் »
கிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது
தன் விழுதுகளை நம்பியே
நிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக …
அதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்…
லட்சோபலட்சம் பைங்கிளிகளின்
ஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது.
தமிழில் ஹைக்கூ கவிதைகள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள்,
» Read more about: காலமெல்லாம் தமிழ் »
மணமுடித்த மங்கையே நீவாழி!
மங்கலம்நிறை தங்கையே நீவாழி!
கனவுயாவும் நிறைவேறி நீமகிழ
காட்சிதரும் கண்மணியே நீவாழி!
புகுந்தவீடு புகழ்பெற்றல் போலுனது
பிறந்தவீடு மனமகிழவும் செய்திடணும்,
கண்ணிறைந்த கணவனவன் செயல்களிலே
கட்டாயம் உன்விருப்பம் கலந்திடணும்.