கவிதை
என்னுள்
பொடி-நடையாய் நடந்தேன்,
தொலைதூர பூங்காவனம்…!
தடையாகித் தடுத்தது,
உள்ளத்து நினைவுகள்…!
வலி-யேதோ உணர்த்தியது,
அழைப்பதாய் மறந்தவள்…!
பலகாலம் பழகியவள்!
சிலகாலமாய் பிரிந்தவள்…!
பொடி-நடையாய் நடந்தேன்,
தொலைதூர பூங்காவனம்…!
தடையாகித் தடுத்தது,
உள்ளத்து நினைவுகள்…!
வலி-யேதோ உணர்த்தியது,
அழைப்பதாய் மறந்தவள்…!
பலகாலம் பழகியவள்!
சிலகாலமாய் பிரிந்தவள்…!
கண்களில் நூறு கவிதைகள்
கனவுகளை விதையாக்கி
காதலின் இனிமைக்காய்
காலம் கனியட்டும் என்று காத்திருப்பு!
வரன் தேடி வரம் தந்தவர்கள்
வளமான வாழ்வை பரிசளிக்க
உத்தமர் ஒருவனை தேடியே
உயிரின் துணையாக இணைத்தனர்!
எப்படி முடிகிறது உன்னால் என்னை
ஏமாற்றி செல்ல ??
எப்படி முடிகிறது இத்தனை நாள்
பேசாமல் இருக்க ??
எப்படியடா முடிகிறது என்னை மறந்து
உன்னால் சந்தோசமாய் வாழ ??
உற்ற உறவின் முதற்படியாய் உன்னதமான உறவுகளாய் பெற்ற தாயும் தந்தையென பெருமை கொள்ளும் முதற்சொந்தம் !
நாம் அன்பால் இணைந்தோம்
நம் உறவின் அர்த்தம்?
இன்னமும் புரியவில்லை எனக்கு!
நம்முள் விரிசல் ஏற்படுமோ
அச்சம் என்னுள் தினமும்.
உன் நினைவால் நானும்
உன்னை என்னவனாய் நினைத்து
வாடுகிறேன் நாளும் சருகாய் …
ஆசையாய் பெற்றவர்கள்
ஆதரவின்றி வாழ்கின்றனர்.
ஆதவனின் அரவணைப்பால்
ஆகாரமின்றி தவிக்கின்றனர்.
ஈன்றவர்களை நினையாது
ஈசனை வழிபடுகின்றனர்.
ஈருலகம் சென்றாலும்
ஈடேறுமா இவர்கள் பிரார்த்தனை?
வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! - குறள் வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்! தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! - தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!
நிறுத்தாத பேச்சும் நிமிடத்திற்கொரு முத்தமுமென சொர்க்க மத்தியில்தானே மனங்கள் மணக்க மணக்க கை கோர்த்து நடந்தோம்
குளமுமே வத்திப் போச்சு
குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப
நிலமுமே காஞ்சு போச்சு
நிலத்தடி நீரு மில்ல!
விளச்சலும் குறைஞ்சு போச்சு
விளைநிலம் வீடா ஆச்சு –