கவிதை

பெண் தொழிலாளி

கூந்தலினைப் பின்னிப்போட்டவள்
கூடதடுக்கையையும் பின்னுறாள்.
ஆசையாகப் பின்னும் எதிலுமே
ஆனந்தம் பொங்கி வழியுமே!

உழைத்துக் கருத்துப்போனவள்,
உள்ளம் வெளுத்துப்போனவள்.
கள்ளமில்லா நெஞ்சத்தில் ;நாளும்
கருணைமழைப் பொழிபவள்.

 » Read more about: பெண் தொழிலாளி  »

கவிதை

நம்தோழர்!

(பாவகை: கலித்துறை)

மழைவளம் வேண்டி மண்ணுழவு காக்கும் விவசாயி
களைப்புடன் ஓய்ந்து கரங்களை வேற்று வேலைக்காய்
அழைப்பினை ஏற்று அவனியில் மாறிச் சென்றிடுங்கால்
உழைப்பினால் சோற்றுக் குரமிடல் இல்லா தொழிவதாகும்!

 » Read more about: நம்தோழர்!  »

கவிதை

அடங்கி முடங்கி!

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா

குறைபலச் சொல்லி குறைபடும் மாந்தர்
கறைபட நாக்கு கசந்திடும் வார்த்தை
தரையினில் கொட்டித் தளராமல் வீசி
மறைதனை ஓத மறக்கும் நிலையும்
கறையாமல் நின்று கசந்திடும் வாழ்வில்
அறைதனில் சோர்ந்து அடங்கி முடங்கி
பறையடி போலலையும் பற்பல எண்ணம்
நிறைந்துதான் நெஞ்சினில் நிம்மதி போக்குவரே!

 » Read more about: அடங்கி முடங்கி!  »

கவிதை

உயர்வென்ன தாழ்வென்ன!

(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா)

பாடுபடும் கைகள் பகலவன் போலொளி
கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம்
ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய்
ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்!

 » Read more about: உயர்வென்ன தாழ்வென்ன!  »

கவிதை

உயர்(ஒளிர்)வாய்

வஞ்சித் தாழிசை

20160413_1943தானாய் உழைத்து
தேனாய் இனித்து
மானாய்த் துள்ளி
வானாய் உயர்வாய்.!

மண்ணில்  மலர்ந்தாய்
கண்ணாய்க் கற்று
விண்ணை ஆண்டுப்
பண்பில் உயர்வாய்.!

 » Read more about: உயர்(ஒளிர்)வாய்  »

கவிதை

க(பெ)ற்ற அனுபவம்!

பாவகை20160425_1450: வஞ்சித் தாழிசை

கூடம் அதிரும்
சாடல் கேட்டு
வேடம் கலைந்த
பாடம் பெ(க)ற்றேன்!

தேடி வந்து
சாடித் தீர்த்தக்
கேடிச் சொல்லில்
கோடி பெ(க)ற்றேன்!

 » Read more about: க(பெ)ற்ற அனுபவம்!  »

புதுக் கவிதை

தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்

தென்றலினைத் தூதுவிட்டு
தேன்தமிழை மோதவிட்ட
அன்றலர்ந்த தாமரையே அழகு அழகு – உன்
அன்னநடையில் எனையிழுத்துப் பழகு பழகு

செவ்விதழைப் பூக்கவைத்து
தேன்சுவையைத் தேக்கிவைத்து
நவரசத்தைக் காட்டுகின்ற உதடு உதடு –

 » Read more about: தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்  »

கவிதை

எங்கேயும் நீ

20160421_1749கடற்கரைக்கு சென்றால்,
அலையாய் நீ தெரிகிறாய்!
பூந்தோட்டதுக்கு சென்றால்,
பூக்களாய் நீ தெரிகிறாய்!
குளிக்கச் சென்றால் தொட்டியில்
தண்ணீராய் நீ தெரிகிறாய்!
ஏன்?

 » Read more about: எங்கேயும் நீ  »

கவிதை

என் மனமே …

20160414_1429எதிரெதிர் சாளரத்தின்
திரை கசிவில்
கரைந்து போன என் மனமே

அந்தியையும் விடியலாக்கி
வினவாத வாா்த்தைக்கு
விடை காணும் என் மனமே

நாழிகையயும்
நாட்களையும் தூசுகளாக்கி
திங்கள் கழித்து
ஆண்டுகள் வளர்த்த என் மனமே

பேசி தெளியாமல்
பூங்காவில் நனையாமல்
யதாா்த்தமாய் உரசாமல்

நித்தன் இவனென்று
நித்திரை தொலைத்த
என் மனமே

தாய்மை தோற்குமோ
மொழிகள் அழுதிடுமோ

நம் புரிந்துணர்வில்
விமர்சனங்களும்
மலர் கொத்தாய் மாறுமோ

 » Read more about: என் மனமே …  »