கவிதை
பள்ளிக்கூடம்
கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம்.
கரும்பலகையில் கிறுக்கிய கையுடன்,
கண்சிமிட்டி பேசிய எழுத்து !
வாத்யாரின் பிறம்பை பார்த்து
பின்னுக்கு தள்ளி பயந்த காலு,
» Read more about: பள்ளிக்கூடம் »
கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம்.
கரும்பலகையில் கிறுக்கிய கையுடன்,
கண்சிமிட்டி பேசிய எழுத்து !
வாத்யாரின் பிறம்பை பார்த்து
பின்னுக்கு தள்ளி பயந்த காலு,
» Read more about: பள்ளிக்கூடம் »
வாசிப்பை நேசிப்பாய்
வளமாக்கும் அது உன்னை!
வார்த்தைகளில் சொல்ல
வாராத இன்பத்தைத்
தருமுனக்கு வாசிப்பு!
அவரவரே அனுபவித்து
உணர்கின்ற மகிழ்ச்சி அது!
அனுபவித்துப் பார்!
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிகள் பாடுமாம்
என் வீட்டு தறியோ என்னை கவிஞனாக்கியது!
என்னிதய ஓசைகளை காட்டிலும்
தறியின் ஓசைகளையே
நான் அதிகமாக்க் கேட்டிருக்கிறேன்!
தறிகள் ஆடும் போதுதான் எனக்குள்
காதலும் நர்த்தனம் ஆடுகின்றன …
“பகலை கதவிடிக்கில் தள்ளிவிட்டு”,
இரவின் அமைதியில்,
நெடுந்தூரமாய் மூழ்கிடவே,
ஆசைப்படுகிறேன்.
எனை அணைக்க வந்த இரவு,
என் உடலை
தட்டித் தாலாட்டுவதை
நான் உணர்ந்தேன்.
ஆதி மனிதன் உடை என்று
ஒன்றை அறிந்ததில்லை
அடுத்து வந்த மனிதன் உணர்ந்தான் அதை
மரக்கிளைகளையும் கொத்துக்களையும்
கொண்டு மறைத்தான் உடலை.
நாகரிக மனிதன் பிறந்தான்
(அ)னாகரியங்களை கண்டு
பிடித்து மகிழ்ந்தான்.
அல்லிமலர் போலிருக்கும்
அழகானப் பெண்ணருகில்
கொல்லிப்பலா கொஞ்சுகின்ற
கவிஞரிவர் தமிழ்நெஞ்சம்,
அள்ளிக்கொண் டுசென்றிடவே
ஆவலுடன் நிற்கின்றார்,
பள்ளியறைக் காத்திருக்க
பலகனவுப் பூத்திருக்க.
வெள்ளிநிலவு இங்குவந்து
விளையாட்டில் தனைமறந்து
பில்லியாட்ஸ் ஆடுகின்ற
பேரழகை என்னென்பேன்,
என் பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை
புணர தடவுகிறாய்.
மார்புகளும் புடைத்திருக்கவில்லை
இடையும் மெருகேறியிருக்கவில்லை
மாதவிலக்கும் வரும் வயதும் எனகில்லை
உடல் தெரிய அரைகுறை ஆடை அணியவில்லை
கண்ணால் கவர்ச்சி வலை வீசவில்லை
ஆணினித்தை பழிக்கவில்லை
பெண்ணியம் பேசவில்லை
புரட்சி காரியும் நானில்லை
அகங்காரமும் கொள்ளவில்லை
ஆணவ செருக்கும் எனக்கில்லை
திமிர் பேச்சும் பேசவில்லை
சரிசமமும் கேட்கவில்லை
பெண்ணுரிமை சட்டமும் பேசவில்லை
பெண்ணிய கவிதைகளும் எழுதவில்லை
அடக்குமுறை பற்றியும் உரையாற்றவில்லை
பெரியாரிசமும் உணர்த்தவில்லை
எதிர்த்து பேசவும் தைரியமில்லை
சாதி கலவரமும் நடக்கவில்லை
இன சண்டைகளும் வரவில்லை
மதமும் மாறவில்லை
இலங்கை பெண்ணும் நானில்லை
நுனி நாக்கு ஆங்கிலமும் பேசவில்லை
நடுஇரவில் எங்கும் செல்லவும் இல்லை
திங்க சோறும் கேட்கவில்லை
பழைய உடுப்பும் தேவையில்லை
பணங்காசும் திருடவில்லை
கலவி குறித்தும் அறிந்திருக்க வில்லை
சூழ்நிலை தாக்குதலும் நடத்த தெரியவில்லை
ஏன் என்னை தவறாக நெருங்குகிறாய்
வன்புணர்வு செய்ய முயற்சிக்கிறாய்
என் பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை
புணர தடவுகிறாய்.
வாய்த்திட்ட இப்பிறவி ; வளர்ந்து நன்றாய்
—-வண்டமிழின் புலமைபெற்றுக் கவிதை யாத்து
தூய்மையான புகழுடனே உலகம் போற்ற
—-துலங்குகின்ற பலநூல்கள் தமிழ்க்க ளித்துச்
சேய்நானும் தலைநிமிர்ந்து நின்று நன்றாய்
—-செழுமையான வாழ்வினிலே வாழ்வ தெல்லாம்
தாய்தந்தை இருமனங்கள் கலந்தொன் றாகித்
—-தமைமறந்த கணப்பொழுதின் இழப்பி னாலே !
விதையாய் விழு மண்ணில்
விருச்சயமாய் எழு விண்ணில்
தடைகளை உடைத்தெறிந்து வா..
கற்பாறைகளுக்குள்
முளைத்திருக்கும் சிறுசெடி போல
முட்டிமோதி முளைத்து வா..
பூமியின் மேற்பரப்பில்
விழுந்த விதைகள்
அடிஆழத்தின் ஆணிவேராய்
கண்களுக்கு புலப்படாமல்
காத்திருக்கும்
சிறுதுளி நீராக..
மூன்றெழுத்து சொர்க்கமிது,
முக்கனிகளின் சுவைபோல.
உதடுகளால் உரையாடாது.
உள்ளத்தால் ஒன்றி நிற்கும்.
துன்பத்தில் துணையாய் நிற்கும்.
துயர்நீக்கும் கோலினைபோன்று.
இனிக்கும் பொழுதுகள் தோறும்
இதயத்தை இறுக்கி அணைக்கும்.