மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 5

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

By Admin, ago
பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2

பக்திப்பாடல்

பல்லவி.

தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!
தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!
காளிதேவி வடிவில் நின்றாய்..!
ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.!

(தாயுந்தான்….)

சரணம்.

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2  »

By Admin, ago
பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல்

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா…

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

By Admin, ago
சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.

நூல்கள் அறிமுகம்

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…

அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.

த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.

 » Read more about: வெய்யோனின் வேந்தன்  »

By Admin, ago
சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

மரபுக் கவிதை

கீதாஞ்சலி

அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில் அணியணியாய் மணிவிளக்கம்‌ ஒளிரும் கோவில் நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும் நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம் கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக் கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன் சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ இசை நுணுக்கம் ஏதுமிலை எடுத்துரைக்க இயைபுமொழி யிலக்கணங்கள் பொருந்தல் இல்லை விசையாகப் பாய்கின்ற வேக மில்லை வீறுமொழி அதிர்முழக்கம் அதிலே யில்லை பிசைகின்ற உயிர்க்காற்று ஊற்றி வைத்துப் பிழையறியாச் சிறுபாடல் இசைக்கின் றேன்யான் திசையெங்கும்‌ பரவுகிற இசைக்கோ வைக்குள் சிறியேனின் இளங்குரலைச் செவியேற் பாயோ உணர்வென்னும் தேனமிழ்தம் நிரப்பு கின்றேன் உயிர்உருகும் மெல்லிசையே இசைக்கின் றேன்யான் தணியாத பெருங்காதல் ததும்பும் என்றன் சாமீஉன் திருவடியில் உளம்கி டக்கும் அணியாத பூவாய்என் காதல் மாலை அடிமலர்க்கே சூட்டுகிறேன் அரசே உன்றன் மணிமார்பில் ஏற்பாயோ என்றி ருந்தேன் வந்ததென்னே என்குடிசை வாசல் தேடி என்இசையோ நீவிரும்பும் மலரா யிற்று எளியேனின் வாசலிலே நகைசெய் கின்றாய் என்அன்பே என்குடிசை வாசல் நின்றாய் யானறியேன் எங்கெங்கோ தேடு கின்றேன் என்அன்பே என்அன்பே என்பே னோநான் இளநகைப்பில் உயிர்சுழன்று வீழ்வே னோநான் என்முன்னே யிருப்பதனை அறிகி லேனே என்வாசல் அமுதத்தை சிந்து கின்றாய் எவ்வகையும் தகுதியிலா இரவ லன்யான் என்பொருட்டோ என்அரசே இங்கு வந்தாய் செவ்வியநின் புன்முறுவல் என்னை நோக்கிச் செய்கின்றாய் இம்மாயம் அறிவே னோநான் தெய்வதமே இச்சிறிய மலரை ஏற்றுச் செவ்வியபுன் னகைசெய்தே செல்லு கின்றாய் எவ்விதமும் நின்வருகை அறிந்தி ‌டாமல் நெகிழ்ந்தழுது‌ நின்றதனை என்ன சொல்வேன் தேம்புகிற என்செவியில் பண்ணி சைக்கும் திடீரெனஎன் திசையெல்லாம் தென்றல் வீசும் பூம்பொழில்கள் அசைவெல்லாம் அய்யோ நின்றன் புல்லாங்கு ழலாகக் கேட்கும் என்னே காம்புதிரும் மலரெல்லாம் களிவண் டார்க்கும் கண்ணீரோ வரம்பின்றிப் பொழியும் சாமி தீம்புனலே நீவந்து செய்த மாயம் இவையென்று சிறியேன்யான் தெரிகி லேனே கண்சுழன்று மெய்யுருகிக் கரைந்தே யென்றன் காதலெலாம் இசையாகிக் கனிந்தேன் அய்ய விண்மயங்கும் ஒலிகளிலே எனது பாடல் வெற்றுவெளிக் கலந்திடுமோ உன்பா தத்தில் பண்மயங்கிக் குழைந்திடுமோ மறைந்து போமோ பரபரப்பில் அருகிருக்கும் உனை மறந்தேன் அண்மையிலே உனையறியேன் அழுது நின்றேன் அரசே என் அய்யனே சிரித்துப்போனாய் கண்உதிர்க்கும் கண்ணீரே மலர் களாகக்‌ கைகுவித்தேன் எனையேற்றுக் கொள்வாய் நீயே! (மேலும்…)