கவிதை

கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!

வடுகப்பட்டி ஈன்றெடுத்த வைர முத்து
வாழ்வாங்கு வாழியவே ! வாழ்வில் என்றும்,
துடிப்போடு கவியெழுதும் துள்ளல் உண்டு
துணையாகும் இவரெழுத்து துன்பம் போக்கும்,
படிக்கின்ற வரிகளெல்லாம் பாமரன் போற்றும்
பண்பாட்டின் தலையூற்றைப் பதமாய்ச் சொல்லும்,

 » Read more about: கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!  »

கவிதை

முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த
அஞ்சாத நெஞ்சினரே வாழி!
கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ்
நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி!

முத்துவேலர் பெற்றெடுத்த
முத்தமிழின் பெட்டகமே வாழி!
கத்துகடல் அலையனைத்தும்
கவறிவீச கலைஞரே வாழி!

 » Read more about: முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!  »

கவிதை

பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க
பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை
கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக்
கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து
காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில்
கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் ,

 » Read more about: பாட்டெழுதும் பாவலன் கை  »

கவிதை

உழைப்பு

மலர்பறிக்கும் கைகளில்
மண்வெட்டி , என்றும்
மணம்பரப்பும் தலையில்
கல்சட்டி , விரிந்து
மைவைக்கும் கண்ணில்
புதுமிரட்சி , புதிதாய்
நகைவைக்கும் இதழில்
நாவறட்சி ,

 » Read more about: உழைப்பு  »

கவிதை

சொக்குப்பொடி

சுண்ணப்பொடி சுகந்தப்பொடி
சுந்தரியின் எண்ணப்படி.
வண்ணப்பொடி வசந்தப்பொடி
வந்திருக்கும் சொர்ணப்பொடி.

கோலப்பொடி கொஞ்சும்படி
குலமகளை விஞ்சும்பொடி,
சாயப்பொடி சாந்துப்பொடி
சரியவைக்கும் சந்தனப்பொடி.

மஞ்சள்பொடி மகிழும்படி
மங்கைப்பூச மருதாணிப்பொடி,

 » Read more about: சொக்குப்பொடி  »

கவிதை

பரிதவிக்கும் பணியாரம்

சுட்டுவைத்தேன் பணியாரம்
சூடாறும் முன்னே
தட்டினிலே பரப்பிவைத்தேன்
தானாக விற்குமென்று .
மொத்தமாய் வித்திட்டு
முதலீடு செய்யலாமென்று
சப்தமிட்டுக் கூவிப்பார்த்தேன்,
சாப்பிட யாரும் வரவில்லை .

 » Read more about: பரிதவிக்கும் பணியாரம்  »

கவிதை

பாதுஷா

பாதாமில் செய்திட்ட பாதுஷாவே
நான்தான் இனியுந்தன் நாதர்ஷாவே !
முந்திரியில் செய்தகுளோப் ஜாமூனே
முறுவலிலே நீதருவாய்முன் ஜாமீனே !

ஜீராவில் மிதக்கின்ற ஜாங்கிரியே
எனக்காக நீயென்றும் ஏங்குறியே !

 » Read more about: பாதுஷா  »

கவிதை

பெண் தொழிலாளி

கூந்தலினைப் பின்னிப்போட்டவள்
கூடதடுக்கையையும் பின்னுறாள்.
ஆசையாகப் பின்னும் எதிலுமே
ஆனந்தம் பொங்கி வழியுமே!

உழைத்துக் கருத்துப்போனவள்,
உள்ளம் வெளுத்துப்போனவள்.
கள்ளமில்லா நெஞ்சத்தில் ;நாளும்
கருணைமழைப் பொழிபவள்.

 » Read more about: பெண் தொழிலாளி  »

புதுக் கவிதை

தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்

தென்றலினைத் தூதுவிட்டு
தேன்தமிழை மோதவிட்ட
அன்றலர்ந்த தாமரையே அழகு அழகு – உன்
அன்னநடையில் எனையிழுத்துப் பழகு பழகு

செவ்விதழைப் பூக்கவைத்து
தேன்சுவையைத் தேக்கிவைத்து
நவரசத்தைக் காட்டுகின்ற உதடு உதடு –

 » Read more about: தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்  »

கவிதை

நான் ஆட்சிக்கு வந்தால் …

புட்டிக்குள் இருக்கும் மதுவைப் பருகிடும் செயலைக் கொய்வேன். கடவுள் பெயரால் நடக்கும் கொடுமைகள் பலவும் தடுப்பேன். மடமை போற்றும் துறவிகள் மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் . இலஞ்சம் ஊழல் இல்லாத இலட்சிய ஆட்சிப் புரிவேன்.