ஹைக்கூ

ராஜகவி ராகில் – கவிதைகள்

பெண் விடுதலை பற்றி
பேசியவன் பையில்
வீட்டுச் சாவி

ஓடையாக இருந்தாலும்
உன்னை நதியாக்குகிறது
நம்பிக்கை
நம்பிக்கை உதிர்கின்ற போதுதான்
நிகழ்கிறது
முதல் மரணம்

நிலம் உழுகின்ற
உழவனைகிழித்து விடுகிறது
சமூக ஏர்

பூமிக்கு மேல்
புதை குழி
கட்டில்

உழவனை
நிமிர்ந்து பார்க்க மறுக்கிறது
நெற்கதிர் கூட

ஏழையைச் சாப்பிட்டு
ஏப்பமிடுகிறது
சோறு

 » Read more about: ராஜகவி ராகில் – கவிதைகள்  »

புதுக் கவிதை

நான்

மாடிமனை கட்டி யதில்
வாழ்ந்தவனும் ”நானே”
கோடிபணம் சேர்த் தங்கே
குவித்தவனும் ”நானே”
நாத்திகனாய்க் கதை பேசி
வென்றவனும் ”நானே”
கூத்திகளோ டிரவு பகல்
கொஞ்சியவன் ”நானே”

 » Read more about: நான்  »

ஹைக்கூ

கவிநுட்பத் துளிப்பாக்கள்

1

” பாட்டியின் சேலை…!
கிழிந்தும் உதவியது
பேரனுக்கு தொட்டில்”

2

குழந்தையை சுமந்தாள்
கூடவே ஒட்டிக்கொண்டது
தாய்மை

3

மலர்ந்தது ரோஜா
பறிக்கும்  முன் முத்தமிட்டது
வண்ணத்துப் பூச்சி

4

மரத்தில் குழந்தை சிற்பம்
அணைத்து முத்தமிட்டாள்
குழந்தை இல்லா தாய்

5

புதுமைப் பெண்ணோ
தனிமையில் செல்கிறது
நிலா

6

“நட்சத்திரம் சிரித்ததோ
சிதறிக் கிடக்கிறது
மெரீனாவில் முத்துக்கள்”

 » Read more about: கவிநுட்பத் துளிப்பாக்கள்  »

புதுக் கவிதை

நாணுகிறேன்!

வெட்கத் தாழ்
போட்டு நாணுகிறேன்!

கனவுகளில்
துகிலுரித்து
பார்க்கிறாய்!

கவலைகள்
கடிணங்கள்
எதுவுமில்லை!

மழலையாய்
உன் மடியில்
மலர்கின்றேன்!

 » Read more about: நாணுகிறேன்!  »

புதுக் கவிதை

கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி !
இயற்கையின் நிறத்தினை
இயல்பானத் தரத்தினை
இருளின் வடிவாக
இருக்கப் பெற்றவளே !

கருப்பை இருப்பைக்
கவர்ந்து ஈர்த்து
கறுப்பை நிறமாய்க்
காலத்தில் பெற்றவளே !

 » Read more about: கறுப்பு நிறத்தழகி !  »

மரபுக் கவிதை

உடையாத நீர்க்குமிழி

படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே
—– பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே
அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும்
—– அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு
கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக்
—–

 » Read more about: உடையாத நீர்க்குமிழி  »

By Admin, ago
மரபுக் கவிதை

ஆடைகட்டிவந்த அல்லிமலர்

இரவிவர்மா ஓவியமா
இராமன்கதைக் காவியமோ ?
வானவர்க்கும் கிடைக்காத
வந்திருக்கும் திரவியமோ ?

மின்னலுக்கு ஆடைகட்டி
மேதினியில் உதித்ததுவோ ?
கன்னலுக்குத் தேன்பாய்ச்சி
காலிங்குப் பதித்ததுவோ ?

 » Read more about: ஆடைகட்டிவந்த அல்லிமலர்  »

ஹைக்கூ

குறுங்கவிதைகள்

இந்த வருட
ஒவியப் போட்டியில்
முதல் பரிசு கிடைத்திருக்கிறது
உன் பாதச்சுவடுக்கு.

உன்னை சுமந்து
செல்கிற சந்தோசத்தில்
தேய்ந்து போகிறது
செருப்பு.

ஒடுக்கபட்டவன் என்று
ஒதுக்கியது
சர்க்கார் மட்டுமல்ல
சமுதாயமும் தான்

குப்பைத்தொட்டிதானே என்று
கேவலமாக நினைக்காதீர்
அது பல குழந்தைகளுக்கு
கருவறை

பாவம்!

 » Read more about: குறுங்கவிதைகள்  »

ஹைக்கூ

நிழல்கள்

1.

வாழும் கடவுளை
வீதியில்
விட்டு விட்டு
கோவிலில் தேடுகிறான்
“இல்லாத கடவுளை ”

2.

நிழல் தரும் மரங்கள் தான்
நிம்மதியை தரும் என்பதை
எப்போது உணர போகிறான் ??

 » Read more about: நிழல்கள்  »