கவிதை

கிடைத்த ஐம்பது உரூபா

நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
—-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
—-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
—-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
—-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !

 » Read more about: கிடைத்த ஐம்பது உரூபா  »

கவிதை

வரதட்சணை

சுற்றமுடன் வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார்
சுகமானப் பாட்டுதனைப் பாடக் கேட்டார்
கற்றிட்ட கல்வியினைப் பணியைக் கேட்டார்
கால்களினை நடக்கவிட்டே ஊனம் பார்ததார்
பெற்றவர்கள் சொத்துகளைச் சரியாக் கேட்டார்
பெயரளவில் சிற்றுண்டி சுவைத்த பின்னர்
சற்றேனும் நெஞ்சமதில் ஈர மின்றிச்
சரியாக தட்சணையை எடுத்து ரைத்தார் !

 » Read more about: வரதட்சணை  »

கவிதை

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே !