மரபுக் கவிதை
பெண்ணின்றி அமையாது உலகு
நீரின்றி அமையாது உலகு என்பதுபோல்
பெண்ணின்றி அமையாது நல்வாழ்வு.!
சக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து
சிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.!
பத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு
பக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும்
பாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்
பார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.!