கவிதை
காற்றாய் என்னுள் வந்து போகிறாய்
காற்றாய் என்னுள் வந்து போகிறாய்
காதல் கவிதைகள் தந்து போகிறாய்
நேற்றோடிந்த உறவு முடிந்ததா
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! …
கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே ?…
காற்றாய் என்னுள் வந்து போகிறாய்
காதல் கவிதைகள் தந்து போகிறாய்
நேற்றோடிந்த உறவு முடிந்ததா
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! …
கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே ?…
இயற்கை எழுதிய
தண்ணீர்க் கவிதை நான்.
மண்ணின் மனக்குரலின்
திரவப் பதிவு . . !
புவிக்கோளத்தின் புதுமை
யுகங்களைக் கடந்து நிற்கும்
அகிலத்தின் ஆயுள் ரேகை.
புட்டிக்குள் இருக்கும் மதுவைப் பருகிடும் செயலைக் கொய்வேன். கடவுள் பெயரால் நடக்கும் கொடுமைகள் பலவும் தடுப்பேன். மடமை போற்றும் துறவிகள் மணித்தமிழ் வளர்க்க விடுப்பேன் . இலஞ்சம் ஊழல் இல்லாத இலட்சிய ஆட்சிப் புரிவேன்.
ஐந்தாண்டுகளுக்கு முன் அளித்த அதே வாக்குறுதிகள் மறுபடியும் ஊர்வலமாய்... மறதியின் பிடியில் வாக்காளர்கள்.
உன்னோடு கொஞ்சி துள்ளி விளையாடவே விண்மீன்கள் ரெண்டும் ஓடி வந்து உந்தன் விழிகளுக்குள் ஒளிந்ததோ ! வெள்ளி நிலவே உன்ன தாலாட்டவே வானவில் அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி தொங்குதோ !
வாடுது வாடுது
எம்மனசு இங்கே
உன்னை நினைத்து வாடுது …
தேடுது தேடுது
எந்தன் விழிகள்
கனவில் உன்ன தேடுது …
நற்றமிழே என் உயிர் என்பார் நாவில் தமிழ் உயிர் ஊசலாட... பெற்ற சுதந்திரம் பேண் என்பார் மற்றவர் உரிமையை களவாடி...