கவிதை
உயர்வென்ன தாழ்வென்ன!
(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா)
பாடுபடும் கைகள் பகலவன் போலொளி
கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம்
ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய்
ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்!
(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா)
பாடுபடும் கைகள் பகலவன் போலொளி
கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம்
ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய்
ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்!
கூடம் அதிரும்
சாடல் கேட்டு
வேடம் கலைந்த
பாடம் பெ(க)ற்றேன்!
தேடி வந்து
சாடித் தீர்த்தக்
கேடிச் சொல்லில்
கோடி பெ(க)ற்றேன்!
உற்ற உறவின் முதற்படியாய் உன்னதமான உறவுகளாய் பெற்ற தாயும் தந்தையென பெருமை கொள்ளும் முதற்சொந்தம் !
வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! - குறள் வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்! தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! - தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!
குளமுமே வத்திப் போச்சு
குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப
நிலமுமே காஞ்சு போச்சு
நிலத்தடி நீரு மில்ல!
விளச்சலும் குறைஞ்சு போச்சு
விளைநிலம் வீடா ஆச்சு –
வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
…… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
…… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
……
உழவுத் தொழிலும் செழிக்கட்டும் - நம் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளட்டும்! வளமாய் நாட்டை மாற்றிடவே - ஒரு வண்ணத் தமிழன் ஆளட்டும்! விடையும் காண விரையட்டும் - நல் வெற்றிக் கனியைப் பறிக்கட்டும்! குடியால் வீழ்ந்து கிடப்போரும் - தமிழ்க் குடியைக் காக்க விழிக்கட்டும்!
பெற்றோரைப் பேணாமல் நற்றமிழைக் காவாமல் வற்றித்தான் போனதுவா அன்பு - நீயும் வருந்தித்தான் அழுவதுவா பின்பு!
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! - தேயவழி தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்! பீடும் பிணையும் பெருத்து! கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! - அற்புதமாய் அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்! வந்தோதி ஓங்குமே வாழ்வு!
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் – தென்னை நல்கிய குளிரிள நீரும் இனிய என்பேன் எனினும் – தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்.