மரபுக் கவிதை

பாடிப் பறந்த குயில்!

பாவேந்தர் 125ஆம் ஆண்டு விழாப் பாட்டரங்கம்

தமிழ் வணக்கம்!

தென்னாட்டு மலையேறித் தெம்மாங்கு கவிபாடித்
தேனாற்றில் நீராடும் தமிழே!
என்பாட்டுச் சிறந்தோங்க என்நாவில் நீ..யாடி
இழைத்தூட்டுத் தித்திக்கும் அமுதே!

 » Read more about: பாடிப் பறந்த குயில்!  »

மரபுக் கவிதை

எல்லோரும் வெல்வோம்

சொத்துக்கள் சேர்ப்பதுவே வெற்றி யன்று
சொந்தங்கள் சேர்ப்பதுவும் வெற்றி யன்று
எத்தனைநாள் இப்புவியில் வாழ்ந்தோம் என்னும்
எண்ணிக்கை வெற்றியன்று வாழும் நாளில்
எத்தனைபேர் வாழ்வதற்கே உதவி செய்தோம்
என்பதுதான் வெற்றிக்குத் துலாக்கோல் தம்பி
செத்தபின்னர் இவன்போல யாருண் டென்ற
சேமிப்பே நிலையான வெற்றி யாகும்.

 » Read more about: எல்லோரும் வெல்வோம்  »

மரபுக் கவிதை

தேன்தமிழ் அழகு!

fb_img_1479227632649தேங்கிக் கிடக்கும்
தேன்தமிழ் அழகைத்
தேடிக் கண்டேன் அறிதாய்!
ஏங்கித் தவிக்கும்
எந்தன் நெஞ்சின்
ஏக்கம் தன்னை அறிவாய்!
தாங்கிக் காப்பேன்
தமிழே உன்னை
தடைகள் தாண்டி வருவாய்!

 » Read more about: தேன்தமிழ் அழகு!  »

மரபுக் கவிதை

தமிழ்த்தேனே

pulavar_punganeeriyaarமலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே
மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில்
கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர்
கலைத்தேனே எனவேறு மொழிக லக்க
விலைத்தேனே ஆனாயே!

 » Read more about: தமிழ்த்தேனே  »

மரபுக் கவிதை

தேனே…

செந்தமிழ்நா டென்கையிலே செவியருந்தும் தேனே!
செப்பியசீர் பாரதியின் சேதிபடித் தேனே!
எப்படியோர் மொழிக்கிந்த இனிமை? நினைந் தேனே!
பாரதிமுன் என்வினவை
கேட்கவிழைந் தேனே!
வுடன்சற்றே இந்தவிழை
விழியுமயர்ந் தேனே!

 » Read more about: தேனே…  »

மரபுக் கவிதை

தென்றல்விடு தூது!

தென்றல் அவள் மேலாடை

தென்றல் அது தாலாட்ட
மேலெழுந்த அவள் நூலாடை
முக்காடாய் அவன் முகம் வருட

வசியம் செய்யும் அவள் வாசம்
சுவாசமாய் அவன் நாசிபுக
முழுதாய் அவளை முழுங்கிவிட
அனுபவக் காற்றை தூதுவிட்டான்

எடுத்திடவோ கொடுத்திடவோ
காதல் மட்டுமே அவன் கையிருப்பாய்
மறுத்திடவோ ஏற்றிடவோ
நாணம் மட்டுமே அவள் தவிப்பாய்

மண்ணில் திரியும் நிலவுமகள்
கண்ணுக்குள் அவனைக் குவிக்க
இடை புகுந்த துணைக் காற்று
எட்டப்பனாய் காட்டிக் கொடுத்தது

நடுவில் படர்ந்த நடைதூரம்
நாலடிக்குள் சுருங்கி அருங்கி
தடைத் தகர்த்து இடைத் தூர்ந்து
இடைப் பற்றியது மன்மதக் கரம்

உடைப்பற்றிய ஊதக் காற்று
மடைத்திறப்பிற்கு கற்பூரம் காட்டி
விடைத் தெரியா இனபத் தவிப்பிற்கு
படையல் போட்டு பசியாற்றியது!

 » Read more about: தென்றல்விடு தூது!  »

மரபுக் கவிதை

தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!

நசையெலாம் நனவாய் நிகழ்த்திட
—– அசைமலர் அடர் நந்தவனத்தே
பூசை கொள் தலைவன் வருகைக்காய்
—– ஆசையால் அலர்விழி காத்திருந்தாள்
கண்ணனவன் கழற் கூடிடுவான்
—– முன்னமவன் செப்பிய வாக்கால்
கன்னம் வைக்கும் கைச்சிறையில்
—–

 » Read more about: தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!  »

மரபுக் கவிதை

பாடு மனமே பாடு!

எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
    ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
    போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
    என்றும் மனச்சுமையைப் போக்கும் !

 » Read more about: பாடு மனமே பாடு!  »

மரபுக் கவிதை

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!

செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச்
சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே
அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள்
அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ!

கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு
கைவிர லாலெனை வென்றவ னே
கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா
கோடிச்சு கம்தரும்  மோகன மே!

 » Read more about: இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!  »

மரபுக் கவிதை

என் க(வி)தை

நூற்றெண்பத்தொன்பது சீர் ஆசிரிய விருத்தம் (27×7 சீர்கள் ஓரடிக்கு) ×நான்கடி

பூவிழிப் பார்வை நோக்கினில் வீழ்ந்து
புதைந்திடு மகவை தனில்நானும்
பொற்றமிழ்ப் பெண்ணாள் பார்வையி லின்பம்
பொங்கிட வீழ்ந்து பொலிவுற்றேன்
புண்ணெனத் தாக்கும் உற்றவர் மற்றோர்
பொசுக்கியும் வாழ்வில் இடறாமல்
பொங்கியெ ழுந்தேன் என்முனே நின்ற
பொறுப்பையு ணர்ந்தே செயல்பட்டேன்
புண்மைகள் தீர நன்மைகள் சேரப்
போற்றிட லானேன் என்வாழ்வில்
பொற்பினைச் சேர்க்கும் கல்வியைக் கண்ணாய்ப்
பொங்கிடு மாவ லால்கற்றேன்
போதுமுன் கல்வி வறுமையைத் தீர்க்கப்
புறப்படு வாயே வேலைக்குப்
பூத்திடும் பசியைப் போக்கிடு மகனே
போபோ என்றார் என்னன்னை
போதெனு மிளமை இன்பங்கள் கழியப்
புரிந்தன வாழ்வின் உண்மைகள்
புரிந்தவப் போது கீழ்மைகள் மிஞ்சிப்
புகுந்தன பலவாய்த் துன்பங்கள்
புதைந்தவென் இன்ப நிலையினை மீட்கப்
பொருந்துவ தேதென வோர்ந்திட்டேன்
பொலிந்திட லுற்றே என்னுடைக் குடும்பம்
பூத்திட லொன்றே குறிக்கொண்டேன்
போதிய வுழைப்பும் போதிலா வுணவும்
புரிந்திடா வுணர்வும் வரப்பெற்றேன்
போற்றியுண் என்றார் உணவினை முன்னோர்
போற்றியும் உணவு கிடைக்கவிலை
போதுமோ என்றே ஏக்கமாய்க் கழியும்
புதிரென வயிறும் சோர்ந்ததுவே
போட்டிடும் உரமே பயிர்தனை வளர்க்கும்
பொசுங்கிடும் பற்றாக் குறையானால்
பூட்டிய அறையின் குப்பையாய் வயிறும்
பொசுக்கென நசுங்கி யுள்வாங்கப்
புதிரினை அவிழ்க்கும் வழிதனைக் கண்டேன்
புதுப்பய ணத்தைத் தொடர்ந்திட்டேன்
புதியவென் பயணம் புலர்ந்திடுங் கதிரின்
புத்துணர் வாக எழுந்ததனால்
பொசுக்கிய வறுமை உடனழிந் தொடப்
புனர்நிலை நோக்கி யேசென்றோம்
புயலெனச் சூழ்ந்த துன்பமாய்த் தன்னின்
பொறுப்பினை மறந்த என்தந்தை
புறப்பபட லானார் தனிமையில் வீழ்ந்தோம்
பொறுப்பினை நானே ஏற்றிட்டேன்
பொறுமையாய்ச் செய்யும் மின்பணி என்றன்
புழினை நாளும் கூட்டியதால்
பொசுங்கிய வாழ்வும் விரிகதி ரோனாய்ப்
புத்துணர் வெய்தி எழுந்ததுகாண்
பொறுப்புகள் தானே மனிதனின் நிலையைப்
புதுக்கிடும் கருவி?

 » Read more about: என் க(வி)தை  »