மருதாணி கொஞ்சம் தடுமாரி – உன்
கன்னம் சிவப்பாகிப் போனதோ!
மஞ்சல் முக மதியே நீ
கண்கள் மறைத்தாய் நீ
வெட்கம் நிறமாகி
செக்கச்சிவப்பான
உன்
பொழிவதனை மருதானி
கடன் வேண்டுமென்று
கன்னம் தழுவாமல்
கரங்களில் கவசம் செய்கிறாய்!
பெண்ணிவளில் பொற்கரங்களில்
சென் நிறத்தினில் செங்கதிரவன்
செங்கோடுகளாய் கோலமதுஇட்டு
வான் வெளிக்கையில்
வெட்க்கம் படை எடுக்கையில்
வேல் விழிகளை போர் தொடுக்காது
(கை)ஐ விரல் கொண்டு
அரண் செய்கிறாள்!
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.