இன்றோடு எல்லாம் முடிந்தது
சிகரம் தொட வளர்த்த கனவுகளோடு
நட்பும் சொந்தமும்… சிதறிப் போனது
இனி தாய் வீட்டிலும் நான் விருந்தாளியாம்
நாற்றங்கால் மாற்றி நடவு ஆகிறது
போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள
கடைசியாய் அழுது கொள்கிறேன்
இளவரசி ஒப்பனை கலைகிறேன்
நாளை முதல் நான் …
அவன் வீட்டு வேலைக்காரி!
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.
3 Comments
செந்தாமரைக்கொடி · ஜனவரி 28, 2017 at 9 h 57 min
நன்றி உறவுகளே ..
சிறப்பு நன்றி முதன்மையாசிரியர் திருமிகு. அமின் அண்ணா அவர்களுக்கு.
TamilNenjam
RAJAGEETHAN · ஜனவரி 28, 2017 at 10 h 29 min
அசத்தல்..
Saravanan Karunanithi · ஜனவரி 30, 2017 at 10 h 29 min
போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள…