oppanaiஇன்றோடு எல்லாம் முடிந்தது
சிகரம் தொட வளர்த்த கனவுகளோடு
நட்பும் சொந்தமும்… சிதறிப் போனது
இனி தாய் வீட்டிலும் நான் விருந்தாளியாம்
நாற்றங்கால் மாற்றி நடவு ஆகிறது
போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள
கடைசியாய் அழுது கொள்கிறேன்
இளவரசி ஒப்பனை கலைகிறேன்
நாளை முதல் நான் …
அவன் வீட்டு வேலைக்காரி!


3 Comments

செந்தாமரைக்கொடி · ஜனவரி 28, 2017 at 9 h 57 min

நன்றி உறவுகளே ..

சிறப்பு நன்றி முதன்மையாசிரியர் திருமிகு. அமின் அண்ணா அவர்களுக்கு.
TamilNenjam

RAJAGEETHAN · ஜனவரி 28, 2017 at 10 h 29 min

அசத்தல்..

Saravanan Karunanithi · ஜனவரி 30, 2017 at 10 h 29 min

போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...