விழியாலே கதைசொல்லும்
வெள்ளிநிலவே! உந்தன்
மொழிசொல்லும் கவிதையுமே
மெளனம்தானோ? வீணாய்ப்
பழிபோடும் எண்ணத்தின்
பார்வையிது, விழியில்
வழிகின்ற கவர்ச்சியிலே
வழிமாறும் மனமும்தான்.

கன்னத்தில் கைவைத்தக்
காரிகையே! கவின்மலரே!
அன்னத்தில் கைவைத்து
அனைவருக்கும் பகிர்ந்தாயோ?
உன்னிடத்தில் தளிர்க்கின்ற
உயர்வான அழகாலே
மன்னனுமே காத்திருப்பான்
மகாராணி ஆக்குதற்கே!

சடுதியிலே குளித்தபின்னும்
சடைப்பின்ன நேரமிலையோ?
அடுப்படியில் அனலிடையே
அழகுமலர் நீயிருக்க
படிப்படியாய் சமையலினைப்
பாங்காக நீமுடிப்பாய்,
நடிப்பதுபோல் செய்தாலும்
நளபாகம் உன்செயலே!

பார்வையிலே பொங்கலிட்டுப்
படைக்கின்றப் பேரழகே!
கோர்வையாய் வருகின்ற
கொஞ்சுதமிழ்ப் பாட்டிசைத்து
ஆர்வமுடன் அவனிக்கே
அருந்தமிழை நீயுரைப்பாய்.
கார்மேகக் கூந்தலிங்குக்
கவிபடிக்க மகிழ்ச்சிதானே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »