நான் உலகத்தைப்பற்றி பேசுவதும்
உலகம் என்னைப்பற்றி விமர்சிப்பதும்
ஆளுமை செலுத்தும் மனசாட்சியின்
அழுத்தமும், ஆரோக்கியமும்,
அழுக்குப் பொதிகளை அகற்றம்படி
மனசாட்சி ஆணையிடும்போது
அடங்கிப் போவது
மனித தர்மத்தின் உச்சமே!
பகுத்தறிவுவாத பெருமைக்கும்
பலமுள்ள சமூக சிந்தனைக்கும்
முகவரிதரும் மனசாட்சியின் குரல்
தனிமனிதனை, தனித்துவ பெருமையிலே
தரணி முன் நிறுத்துகிறது உத்தமனாக!
மனசாட்சியை இழப்பதும்
இல்லாமல் செய்வதும்
மானிலத்தை அவமதிப்பதாகும்…
மனித புலத்திற்குள், வனவிலங்குகள்
வாசம் செய்வதாக!
மனசாட்சியைக் கொன்று
வாழ்தலென்பது,
காலமுனை சிரச்சேதம் செய்யும்
தருணமாகிவிடும்!
மனிதனுக்கும், மனசாட்சிக்கும்
இடைவெளியிருப்பின்
செங்கோல்கள் செயலிழந்துவிடும்..
பங்கப்படும் மூச்சுக்களில்
‘பங்கசு’க் கிருமிகள் பெருகும்!!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...