கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட
          மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்
துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?
          மெல்ல அலையெழுப்பும் சிற்றோடை நீர்சரியோ?

மஞ்சுப் பொதிசரியோ ? மயக்கும் விழிசரியோ?
          கொஞ்சும் குயில்வந்து குரலிசைத்துச் சொல்லிடுமோ?
நெஞ்சம் நிறைந்ததென் நெகிழ்ந்த காதலதைச்
          சொற்களின் தூதாகச் சொல்லிவிட எதுசரியோ?

தழுவிடும் ஆசைவந்துத் தத்தளிக்கும் குமிழியென
          மொத்தமாய்க் குமிழ்விட்டு மோதியென்னை நிலைகுலைக்கும்
சத்தமின்றித் தூதுசொல்லச் சரியான தூதெதுவோ?
          நித்தமுன்னைத் தழுவிடுமக் காற்றிங்கு சரிவருமோ?

மெல்ல முகிழ்மலர்கள் மேனி தடவியிங்கே
          செல்லும் காற்றினிலேச் சீராய் மணம்பரவும்
சொல்லும் காதல்மொழி சுகந்தப் பொடிசுமந்து
          உன்னிடம் வரும்போது உள்ளம் மணத்திடுமே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »