வசிப்பிடம். இந்தியாவில் உள்ள தமிழகத்தின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் .

வணிகவியல் பட்டதாரி.

பள்ளி படிக்கும் காலங்களில் இருந்தே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாடு அதிகம்..

பல கவிதைகள் தமிழக வார, மாத இதழ், சிற்றிதழ், மின்னிதழ்களில் வெளியாகி உள்ளது. முகநூலில் தொடர்ந்து எழுதி கொண்டு வருவதுடன்  பல குழுமங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்.  சில குழுமங்களின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

ஹைக்கூ கவிதைகளை 1985 லிருந்து எழுதி வரும் அனுராஜ் 1989 ல் தமிழகத்தின் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த தாய் வார இதழில் இவரது ஹைக்கூ வெளியாகியதோடல்லாமல் அதன் பின் பலமுறை பல இதழ்களில் வெளியாகி உள்ளது. இவரது கவிதைகள் சில தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. முகநூலில் இருநூறுக்கும் மேற்பட்ட ஹைக்கூ போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். முகநூல் குழுமங்களின், மற்றும் தமிழ் அமைப்புகளின் விருதினையும், சான்றிதழையும் பெற்றிருக்கிறார்.

உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் எனும் முகநூல் குழுமத்தின் செயலராக இருந்து வருவதுடன், ஹைக்கூ பயிற்றுவிப்பாளராகவும் செயல்படுகிறார்.


2 Comments

Saradha Santosh · ஜூன் 6, 2019 at 13 h 45 min

சிறந்த கவிஞர்.. பல தமிழ் நற்பணிகளை செய்து வருகிறார்.. வாழ்த்துகள்

கா.ந.கல்யாணசுந்தரம் · ஜூன் 6, 2019 at 18 h 25 min

ஹைக்கூ கவிஞர் அனுராஜ் அவர்களைப்பற்றிய அறிமுகம் அருமை. தமிழ்நெஞ்சம் தமது கவிப்பயணத்தில் ஹைக்கூ கவிதைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு அல்லாமல் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் பணியும் சிறப்பாக செய்துவருவது மிக்க மகிழ்வு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »

அறிமுகம்

உயர்நீதி மன்றத்தில் ஓர் தமிழ்ப்பற்றாளர்

கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் தன்னம்பிக்கைப் பேச்சரங்கமானாலும் தனித்த ஒரு முத்திரை பதிப்பவர். சுருக்கெழுத்து தட்டச்சராகப் பணியாற்றிய பணியாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முகஉதவியாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நீதிமன்றப் பணிகள் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளையும் தளர்வின்றி ஆற்றி வருபவர். கதை கவிதை கட்டுரை என அனைத்துத் துறைகளிலும் பயணித்துவருபவர். கவிதைநூல்களைப் படைத்து ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழக்கூடியவர். உளவியல் நூலக அறிவியல் வணிக மேலாண்மை சட்டம் கலை என பல்வேறு பிரிவுகளில் முதுகலைப்பட்டங்கள் பெற்று பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுக்குச் சான்றாக நடந்து வரும் பெண்மணியார். ஆம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கவிஞர் இராஜ பிரபா அவர்களைத்தான் நேர்காணல் செய்ய மதுரை வந்துள்ளோம். இதோ நேர்காணல்.

அறிமுகம்

நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.