குவளையில் கொஞ்சம்
தமிழை ஊற்றுங்கள் – எந்தன் 
தாகம் தீரப் பருக வேண்டும் !

அறுசுவை விருந்தெனத்
தமிழை அள்ளி – பசிதீர
உண்டு நான் திழைக்க வேண்டும் !

செந்தமிழ்க் காற்றே
மூச்சுக் காற்றாய் – எந்தன்
சுவாசப்பையை நிரப்ப வேண்டும் !

பைந்தமிழ் நூற்று
ஆடையை நெய்து – எந்தன்
உள்ளம் பூரிக்க அணிய வேண்டும் !

மகுடமாகச் சங்கத்தமிழை
சிந்தை மகிழ்ந்து – என்
சிரசில் ஏற்றிச் சுமக்க வேண்டும் !

விளை நிலத்து நெல்மணி போல்
முப்பொழுதும் என் நாவில் – தமிழ்
நிறைவாய் விளைய வேண்டும் !

நடக்கின்ற சாலை எல்லாம்
தமிழ் மலர்ந்து மலர்ந்து – மணம்
பரப்பிடல் வேண்டும் !

இருள் குலைத்து ஒளி பரப்பும்
நிலவாகத் தீந்தமிழ் – என்றென்றும்
என் வாழ்வில் ஒளிர வேண்டும் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்