தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
“தமிழென்ன தருமென் கின்றாய் ?”

“தமிழ்க்கூட்டம் அறிவு நீட்டும் !
தமிழ்க்கூட்டம் நட்பு கூட்டும் !
தமிழ்க்கூட்டம் அன்பு நீட்டும் !
தமிழ்க்கூட்டம் வாழ்க்கை பேசும் !
தமிழ்க்கூட்டம் தவறை நீக்கும் !
தமிழ்க்கூட்டம் வாநீ என்றேன் !”
“தண்டம்நீ சொன்னது” என்றாய் !

“தமிழ்க்கூட்டம் எல்லாம் நீட்ட
தமிழ்நாட்டில் தமிழ்க்கேன்வாட்டம் ?
தமிழ்நிலத்தில் வடவன் வாழத்
தமிழனிவன் துணைபோ கின்றான்!
தமிழர்க்குச் சொரணை யூட்டும்
தமிழ்க்கூட்டம் மட்டும் போதும் !
உமிகளாய் விருது வாங்கி
ஊதினால் பறப்போர் வேண்டாம் !

விருதுகள் இனியும் வேண்டாம்!
வீரமே விருது என்ற
கருதுகோள் கால்பதிக் கட்டும் !
கண்டவன் நுழைகின் றான்பார் !
நெருக்கடியைப் புரட்டிப் போடும்
நெம்புகோல் அமைப்பைக் கண்டு
வரும்படி அழைத்தால் வருவேன் !
வரும்படி தமிழுக் கென்றாய் !”

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »