நீலவண்ண தாவணியில்
நெஞ்சையள்ளும் பேரழகில்
கருஞ்சாந்து பொட்டிட்டு
கண்பறிக்கும் அழகாலே

செந்நிர இதழ்மீது
கருந்துளி மச்சத்தில்
காளையரை மயக்குகின்ற
கச்சிதமான அழகாலே

செவ்விதழ் இதழிணைத்து
தித்திக்கும் மொழிப்பேசி
தேன்சொட்டும் சுவையினில்
தேவதையின் அழகாலே

வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
என்னருகில் வந்தாளே
வான்மகள் நிலவாக
ஔிர்ந்தேதான் நின்றாளே

உச்சரிக்க வார்த்தையின்றி
உதட்டினை கட்டிப்போட்டு
ஊர்மெச்சும் அழகோட
உருவாகி வந்தாளே

பேரழகு யாதென்று
அறியாதோர் அறிந்திடத்தான்
பிரம்மனோட பிறப்பையும்
எஞ்சியே எழில்கொண்டாளே

தோகைமயில் அழகினையும்
மிஞ்சியே வந்தாளே
பஞ்சவர்ண கிளியாக
பிரபஞ்சத்தில் மலர்ந்தாளே

எழில்நிறைப் பேரழகே
என்மனம்நிறை ஓரழகே
உனக்காக நானானேன்
எனக்காக நீயாவாய் ?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்