தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை

என் தேசத்தில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வாய்
எனக்கான சந்ததிகளில்
விழிகள் நிறைய
கண்ணீரோடு கையேந்தும்
சிறுவர்களின் கெஞ்சலும்

தோல்சுருங்கி
கைவிடப்பட்ட மூதாட்டியின்
முனகலோடும்

நடுங்கும் கைகளில்
கைத்தடியின் ஆதரவில்
கால்இடறி ஆதரவின்றி
விழப்போகும் முதியவரிடமும்
தேடுகிறேன்
வறுமையற்ற வாழ்வை.

ஒரே துணியை பலமுறை
உடுத்தி சக மாணவரின்
கேலிக்கு உரித்தாகி
முகம் சுண்டி வீடு திரும்பும்
மாணவனிடமும்

கல்வியின் ஏக்கங்களில்
வீடு வீடாய் பாத்திரக் கரியினை
முகத்தில் தடவி
வீடு திரும்பும்
சிறுமியிடம் தேடுகிறேன்
வறுமையற்ற வாழ்வை.

மார்சுரக்க வழியின்றி
தண்ணீர் நிரப்பி
தன் கைக்குழந்தையின் பசி போக்க
வழியின்றித் தவிக்கும்
தாய்மையில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வை.

இப்படியாக அடுக்கிப்போனால்
கண்ணிர் தளும்பும்
என் விழிகளில்
உவர்ப்புநீர் வற்றி
உதிரம் கொட்டிப்போகும்

வறுமையற்ற
வாழ்வினைத் தேடி
இன்னும் தான் ஓடுகின்றோம்
இன்னும் அந்த கானல்
நீர் கண்ணுக்குத் தெரிகின்றது
கைகளுக்கு எட்டவில்லை.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்