சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

உச்சிவேளை தகித்தாலும்
உணர்த்தும்பசி போக்கிடவே
கச்சிதமாய் பணிமுடிக்கும்
கல்மனதுக் காரர்களே !
மெச்சிடவே பலருமிங்கே
மெய்வார்த்தைக் கூறிடுவர் ,
தச்சுத்தொழில் செய்தாலும்
தவறில்லைத் தரணியிலே ,

காகிதமே பொறுக்கினாலும்
கட்டாயம் அதுதொழிலே ,
ஆயுதங்கள் செய்தாலும்
அத்தனையும் தொழில்தான் ,
தாகமெனத் தவிப்போர்க்குத்
தண்ணீரே பெருந்தெய்வம் ,
சோகமெலாம் தீர்ந்துபோகும்
சுயமான உழைப்பாலே !

உழைப்புக்கு இந்நாளே
உயர்வானத் திருநாளாம் ,
பிழைப்புக்குப் பலவழிகள்
புவிதனிலே இருந்தாலும்
மலைப்பாக எண்ணாமல்
மாநிலத்தின் வேலைகளைக்
களிப்போடு செய்கின்ற
காவலனாய் மாமனிதன் .


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »