உண்மைகளுக்குள்
உண்மைகளைத் தோடும் உலகம்
ஊமையாகிப் போன நேர்மைகள்
தோற்றம் அளிக்கின்றன துரோகங்களாக!

பொய்களுக்கு அளிக்கப்படும்
அலங்கார்த்தில் தான்
எத்தனையே அற்புதங்கள்
மெய்கள் இங்கே முதிர்க்கன்னிகளாக

வாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள்
வாசிப்பதற்கு மாத்திரமே
உள்ளங்களில் ஊன்றப்படும்
உவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே!

வாழ்வில் சூன்யம் வைத்த மனிதன்
வாழ்க்கையில் மாயம் கண்டான்
ஆறுபது வரை ஆயுளில்
தினம் தோறும் புது
புதுப் வேடங்கள் பூண்டான்
வேதங்களை மறந்து
வேதாந்தம் பேசினான்
இவன் விவேகம் இழந்தான்!

நம்பிக்கை பாத்திரம்
ஒட்டையிடப்பட்ட சாஸ்த்திரத்தில்
பலர் காண நீர் இரைத்தான்
யாரை நம்புவது யாரை நோவது
யாவரும் இப்படியே என்பதில்
ஒற்றுமை மட்டுமே நன்றாய் ஒன்றிப்போனது

ரிம்ஸா டீன் / இலங்கை


1 Comment

Selvakumari · ஜூலை 6, 2018 at 8 h 51 min

கவிதை யாரை நம்பச் சொல்கிறது!
ஆனாலும் அழகு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்