முத்துக்களைக் கோர்த்துவந்து
முறுவலிக்கும் பற்களென்றாய்,
கெழுத்திமீனை எடுத்துவந்து
கண்களெனக் காட்டுகின்றாய்.

முந்திரிப்பழம் கொண்டுவந்து
மூக்கென்றே வாசிக்கிறாய்,
கோவைப்பழம் எடுத்துவந்து
கூறுகிறாய் இதழென்று.

கருமுகிலைத் தாங்கிவந்து
கருங்கூந்தல் தானென்றாய்,
சங்கினையே தருவித்துச்
சங்கீதக் கழுத்தென்றாய்.

செரியினையே பதித்துவிட்டு
செந்தூரக் கன்னமென்றாய்,
மல்கோவா மறுதலிக்க
மாம்பழமே முகமென்றாய்.

மட்டைப்பந்து மைதானம்
மங்கையுந்தன் நெற்றியென்றாய்,
மன்மதனின் வில்லாக
மணக்குமிந்த இமையுமென்றாய்.


1 Comment

கவிஞர் அ.முத்துசாமி · மார்ச் 31, 2018 at 14 h 40 min

மிக்க மகிழ்ச்சி ஐயா கவிஞரே தமிழ்நெஞ்சம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »