தழைக்கவே வந்தாள் தரணியில் தைப்பெண்
தமிழும் செழிக்கத் தலைமகள் வந்தாள்!
எங்கும் பொதுமை ஏற்கும் வண்ணம்
தங்க ஒளியை தந்த கதிரோன்!
பொங்கும் மகிழ்வு புதுப்புதுப் பானையில்
பொங்கலோ பொங்கல் பூமிப் பந்தில்!
வந்தது பொங்கல் வளமே ஓங்க!
வந்தது கரும்பு வளர்ந்தது வாழை!
பழையன கழிவன புதியன பொலிந்தன!
மழையெனச் செந்நெல் மண்மேல் குவிந்தன!
போகியும் போனது! பொங்கின மனங்கள்!
ஏகிய செயல்கள் ஏற்றம் கண்டன!
மஞ்சள் செழித்தது! மலர்களும் பூத்தன!
நெஞ்சம் துடித்தது நேசப் பெண்ணிடம்!
மங்கை மலர்மலர் மங்கலம் காட்டும்!
சங்கத் தமிழாய்த் தங்கமவள் மிளிர்ந்தாள்!
பாலும் பொங்கிப் பலாவும் பழுத்ததே
பாலாய்ப் பொழியும் பசுவும் வள்ளலே!
உழவர் நிலத்தை உழுதே விதைப்பர்
உழைப்பால் உரமேற்றி உயர்த்தும் காளை!
மகத்தான நன்றியாம் மாட்டுப் பொங்கல்!
மக்களின் மகிழ்வாம் காணும் பொங்கல்!
வண்ணக் கோலம்! வாழ்த்தும் உள்ளம்
எண்ணம் இனிக்க ஏற்றம் ஏற்கும்!
இந்நாள் போலே இனிமை பெறவே
எந்நாளும் வேண்டி இசைத்தேன் வாழ்த்தே!.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »