எழுகின்ற விடியலிலே இனிமை வேண்டும்
      ஏரியிலே தூயதண்ணீர் ஓட வேண்டும்
உழுகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும்
      உணவினிலே விடங்கலக்கா தர்மம் வேண்டும்
இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும்
      இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும்
விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும்
      விடியலிலே புதுதேசம் மலர வேண்டும்

சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும்
      சோற்றுக்கோ பஞ்சநிலை மாற்ற வேண்டும்
சொந்தங்கள் தமிழ்மக்கள் எண்ணம் வேண்டும்
      சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும்
வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும்
      வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும்
குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும்
      கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும்.

அறிவிழந்த மனிதரென்றே எண்ணித் தந்த
      அத்தனையும் இலவசமாம் என்ன சொல்ல
தறிகெட்ட ஆட்சியிலே சுருட்ட எல்லாம்
      தம்மக்கட் பணமென்ற எண்ண மின்றி
முறிக்கின்றார் நம்கழுத்தை உயிரைக் கொன்றே
      முயன்றிடுவோம் மாற்றத்தை செய்ய நன்றே
தெறிக்கின்ற கனலாகும் நம்மில் கோவம்
      திக்கெட்டும் வாழ்ந்திடுவோம் சிறந்தே நாளும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »