பொன்னந்தி மாலையிலே
      பொங்கிவரும் பாட்டு! – உன்
புன்னகையில் தான்மயங்கிப்
      பூத்ததுள்ளம் கேட்டு!
தென்றலுடன் ஆடிடுதே
      தென்னையிளங் கீற்று – பேசும்
செவ்வலகு கிள்ளையொன்று
      சித்திரம்போல் வீற்று!!

செம்மஞ்சள் சூரியனும்
      செல்லும் விடைபெற்று! – அந்த
செம்மாந்தப் பேரொளியோ
      செம்பவளத் தட்டு!
நம்மிதயம் சேர்ந்திணையும்
      நாளினில்கை தொட்டு – நம்
நற்றமிழில் சொல்லெடுத்து
      நானிசைப்பேன் மெட்டு!

கூடடையும் தாய்வரவில்
      குஞ்சுமுகம் பூக்கும் – அதன்
கொஞ்சுமொழி கேட்டவுடன்
      கூர்விழியால் பார்க்கும்!
ஓடமொன்று அக்கரையில்
      ஓசையின்றிச் சேர்க்கும்! – அதை
ஒட்டிவரும் சேல்கெண்டை
      உள்ளமதை யீர்க்கும் !!

கார்மேகம் கண்டமயில்
      கலாபம் விரித்தாடும்! – அந்த
காட்சியினைக் கண்டமனம்
      காதலியை நாடும்!
சீர்மிகுந்த வெண்ணிலவை
      திரையிட்டு மூடும் – முகில்
திங்களொளி பட்டதுமே
      சேர்த்தணைக்கத் தேடும்!!

கோலநிலா மீன்களுடன்
      கூடியெழில் காட்டும்! – அது
கும்மிருட்டு வந்தபின்னும்
      குலவியொளி கூட்டும்!
சோலைமலர் வாசமது
      துன்பத்தை ஓட்டும்!- என்
சுந்தரியே உன்நினைவோ
      சொர்க்கத்தைக் காட்டும்!!


1 Comment

அதியமான் கார்த்திக் · செப்டம்பர் 28, 2017 at 20 h 36 min

அருமையான கவிதை. வாழ்த்துகள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »