உயர்வா யுலகில் பிறந்தாலும்
      உயிரை மாய்த்தே வாழ்கின்றோம்
மயக்கும் வாழ்வை மனதார
      மடியில் கிடத்தி மகிழ்கின்றோம்
துயரே துயரே துயரென்று
      துடித்தே வாழ்ந்து மடிகின்றோம்
வியப்பாய் வாழத் துடித்தாலும்
      விரிசல் கொண்டே வாழுகிறோம்!

தயங்கித் தயங்கி வாழ்வோரும்
      தமக்குள் புழுங்கிக் கிடக்கின்றார்
பயக்கும் நன்மை புரிபவரோ
      பயமே யின்றிச் சுழல்கின்றார்
இயக்கம் இயக்கம் என்போரும்
      இயங்கா வண்ணம் கிடக்கின்றார்
மயக்கம் தெளிந்தால் மாத்திரமே
      மண்ணில் வாழ முடியுமிங்கே!

உழைத்தே வாழத் துடித்தாலும்
      உறவே கண்ணை வைக்கிறது
பிழைப்பே யின்றிக் கிடந்தாலோ
      பிதற்றும் சொற்கள் கசக்கிறது
இலைபோல் கருகிக் கிடப்பதிலே
      இன்னும் என்ன இருக்கிறது
மலைபோல் பாரம் தலையேற
      மன்றாட் டம்தான் வாழ்விங்கே!


1 Comment

பாத்திமா பர்சானா · செப்டம்பர் 20, 2017 at 3 h 37 min

தங்கள் குரலில் பா மிக அருமை கவிஞரே. இதழாசிரியர் மற்றும் கவிஞருக்கும் வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »