நேர்வழிப் பாதைகள்
திடுக்கிடும் திருப்பங்கள்
பதறவைக்கும் பள்ளங்கள்
மூச்சிரைக்கும் மேடுகள்.
ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்
அசைவற்ற அமைதி
கவிந்துவிட்ட இருள்
கண் பறிக்கும் ஒளி.
சுட்டெரிக்கும் வெயில்
சூழ்ந்திருக்கும் மூடுபனி
குவிந்துவிட்ட கும்பல்
தவிக்கவிட்ட தனிமை.
வீசியடிக்கும் சூறை
தடைப்பட்ட தென்றல்
நேர்மறையும் எதிர்மறையும்
எங்கெங்கும் வழிநெடுகும்
வாழ்க்கைப் பயணத்தில்
வகுக்கப்பட்ட வரைமுறைகள்…
மறைகளை மதித்துக் கொண்டு
மனவழியை மாற்றிக் கொண்டு
தொய்வின்றி கடந்துசென்றால்
தொடும் இலக்கு தூரமில்லை!