மியன்மார்…
மியர்மாரின் மிஞ்சி கிடக்கும்
மானிடம் நடுவில் பூத்துக்கிடக்கும்
இந்த கதறல்…
மழலையின் அழுகையை
நிறுத்த அன்னை அவள்
கொண்ட காட்சிதான்
ஒழிந்திருப்பது அன்று,
நயவஞ்சகம் கொண்ட மானிடம்
செய்த சூழ்ச்சிதான் இன்று அவள்
ஒழிந்தழுவது
மனம் இல்லா மானிடமே
பதில் தாரும்!
பால் கொடுத்த மார்புகள்
எங்கே ?
பால் குடித்த மழலைகள்
எங்கே.?
இறைவன் என ஓடிய
மானிடங்கள்
கால்களின்றி
காடுகள் தேடி
ஓடிவிட்டார்களா இன்று?