மரத்தால் உயிர்வாழும் காலமாறி
        மாத்திரையால் வாழுகிற காலமாச்சே.
உரத்தால் விளைகின்ற பயிர்மாறி
        உருக்குலைந்த வயலாக உருவாச்சே.

உணவையே மருந்தாக உண்கையிலே
        உடலாயுள் கூடியது உண்மைதான்,
உணவுக்குப் பதிலாக உயிரழிக்க
        உருவாக்கும் மருந்திங்கு வந்தாச்சே.

மன்பதையின் ஆயுளிங்குக் கூடக்கூட
        மருந்துகளின் எண்ணிக்கைக் கூடுதலாம்,
மனிதனாயுள் கூடுதற்கு வழியுமின்றி
        மருத்துவத்தின் செலவுதான் கூடிப்போச்சே.

உண்கின்ற உணவுகளின் மதிப்பைவிட
        உயர்மருந்தின் விலையதுவோ அதிகமாச்சே,
அண்மையிலே ஆராய்ச்சி செய்ததிலே
        அதுதானே உண்மையென தெளிவுமாச்சே.

வருங்காலம் மருந்தின்றி வாழ்வதற்கு
        வழியதனைக் காண்பதற்கு வேண்டுகிறேன்,
அரிதான மனிதவாழ்வு நிலைத்திருக்க
        அறிவியலை நாமிங்குக் பேணவேண்டும்.

உயிர்குடிக்கும் மாத்திரையைத் தூரவீசி
        உடல்நலமாய் வாழ்வதற்கு வழிகாண்போம்,
பயிர்வாழ மழைநீரும் வெப்பம்போல்
        பயன்கொடுக்கும் முறைதனையே கண்டுவாழ்வோம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »