தலைவிரி கோலம்
கையில் செல்போன்
நவீன கண்ணகி.

அழுகைக்குப் பதில்
ஆனந்த சிரிப்பு
புதுமை மாதவி.

கவர்கின்ற உடையில்
கச்சித உடம்பு
காண்கின்ற ரதி.

சாலையின் ஓரத்தில்
சஞ்சலத்தில் பெண்
பேசா சாவித்திரி.

கணவனைத் தேடி
காட்டுக்கு வந்த
பொன்மகள் தமயந்தி.

துஷ்யந்தனை மனதில்
துயரமாய் எண்ணும்
தூய்மைநிறை சகுந்தலை.

தீயினுள் புகுந்து
கற்பினை விளக்கும்
காவிய சீதை.

திறந்த கண்களால்
திருமுகம் காட்டும்
கைபேசி காந்தாரி.

ராமனை எண்ணி
சாபம் நீங்கிட
அன்பின் அகலிகை.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »