அஞ்சலி

வரம்போடு தம்வாழ்வை
    வகுத்தளித்து வாழ்ந்துவந்த
பெரம்பலூரில் பிறந்திட்ட
    பெருவைரம் இராமதாசு,
உரமாக இருந்துவந்து
    உயர்வான சிற்றிதழைத்
தரமான எழுத்துகளால்
    தவழவிட்டு மகிழ்ந்துவந்தார்.

பெற்றெடுத்த பிள்ளையினும்
    பிரியமுடன் வளர்த்துவந்த
சிற்றிதழைத் தம்பொறுப்பில்
    சிரமங்கள் பலவிடையே,
முற்றும்நம் தமிழ்வளர
    முனைப்பாக பாடுபட்டு
உற்றதுணை யாயிருந்து
    உயிரையும் உவந்தளித்தார்.

துபாயிலவர் இருந்தாலும்
    துணிவோடு பலசெயல்கள்
சபாக்கள்தரும் வலுவோடு
    சாதித்துக் காட்டியதால்
அபாயங்கள் வந்தபோதும்
    அவைவீழ்த்தி வெற்றிகண்டு
சிபாரிசுகள் செய்வதெல்லாம்
    சிறுபிள்ளைத் தனமென்பார்.

அமிழ்தான மொழியாகி
    அகிலத்தில் சிறப்புற்ற
கமழ்கின்ற இனியமொழி
    கருணைமிகு தமிழ்மொழியைச்
சிமிழாக்கி சிற்றிதழில்
    சேர்த்தக்ருஷ் ராமதாசைத்
தமிழ்நெஞ்சம் இதழின்று
    தலைதாழ்த்தி வணங்குகிறது!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »