(தரவு கொச்சகக் கலிப்பா)
புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட
மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட
செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே
அம்மானை யாடிடவே அழகவளும் வந்தாளே.
நற்றமிழின் சொல்லோச்சி நனிந்துவரும் நங்கையவள்
பொற்புடைய குணவதியாள் பொறுமைக்கு பெருமையவள்
நற்குலத்து உதித்துவந்த நாணிலத்தின் சிறப்பவளே
வற்றாத அன்புடைத்த ஆரணங்கு அவளன்றோ.
தமிழ்பூத்த நல்லுலகில் தங்கத்தின் பொலிவெனவே
அமிழ்தூறும் சொல்லாடி அரவணைக்கும் நறுமணமே
கமழ்கின்ற பூவையவள் காதலிலே நிறைக்கின்றாள்
இமகரனி ளெம்பேனோ இமையாகி குளிர்ந்தாளே.
கண்மணியாள் கவர்ந்திழுக்க காந்தளிதழ் விரலொக்க
விண்மீனாம் கருவிழிகள் விளையாடக் கண்டிடவே
பொன்மணியாள் மலர்க்கூந்தல் மகிழாதோ மணம்வீசி
வண்டாடும் குழலியவள் குழையாட ஆடினளே.
முன்பனியின் துளிதாங்கி முத்தாக ஒளிர்ந்திடுமே
மென்னிதழின் வண்ணத்தில் செங்கதிரோன் நாணிடவே
கன்னிமகள் கனவுகளில் மருதாணி சிவப்பழகாய்
உன்னழகில் நற்காலை காண்டிடவே வருவாயே.