நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த கவிதை
மழை வெவ்வேறு
காலங்களில் பெய்தாலும்
என் இறந்த காலத்தைத்தான்
ஈரமாக்கிவிட்டு போகிறது
ஒற்றைக் குடை
இருவர் பயணம்
அனாதை சாலை
சீதளக்காற்று மெல்லிய உரசல்
பகல் இரவு
புணர் பொழுது
சொர்க்கம் பற்றிய
சந்(தேகம்) தீர்ந்தது
இன்றோடு!
1 Comment
கவிவாணன் · ஆகஸ்ட் 14, 2017 at 13 h 27 min
மழை வெவ்வேறு
காலங்களில் பெய்தாலும்
என் இறந்த காலத்தைத்தான்
ஈரமாக்கிவிட்டு போகிறது
சிறப்பான வரிகள்!