மதுவுடைய பிடியினிலே
மயங்குகிற அடிமையே!
எதுகுடித்தால் இன்பமெனில்
மதுகுடித்தால் இன்பமென்பாய்;

மதுகுடிக்கும் உன்னுயிரை
மயக்கத்திலே நீயிருப்பாய்;
அதுகுடிப்பது உன்னுயிரை
அடுத்தடுத்து உம்முறவை;

இதுகுடித்து ஏப்பமிடும்
எல்லையிலாத் துன்பம்தரும்;
மதுகுடித்தப் போதையிலே
மயங்குகிறப் பேதையிரே!

சதிசெய்யும் சாத்தானாய்
சந்ததிக்கே ஊறுசெய்யும்,
மதிமயக்கி உமையழித்து
மானமதைக் கெடுத்துவிடும்.

மதுவரக்கன் கைபிடிக்க
மனமதுவோ அதிலயிக்க,
பதியாக வாழ்பவரைப்
பாழ்படுத்த வந்ததுவே!

விதிமுடிக்க வருமுன்னே
விழித்துவிடு குடிமகனே!
அதுவுன்னை முடிக்குமுன்னே
அதனைநீ முடித்துவிடு.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்