மதுவுடைய பிடியினிலே
மயங்குகிற அடிமையே!
எதுகுடித்தால் இன்பமெனில்
மதுகுடித்தால் இன்பமென்பாய்;
மதுகுடிக்கும் உன்னுயிரை
மயக்கத்திலே நீயிருப்பாய்;
அதுகுடிப்பது உன்னுயிரை
அடுத்தடுத்து உம்முறவை;
இதுகுடித்து ஏப்பமிடும்
எல்லையிலாத் துன்பம்தரும்;
மதுகுடித்தப் போதையிலே
மயங்குகிறப் பேதையிரே!
சதிசெய்யும் சாத்தானாய்
சந்ததிக்கே ஊறுசெய்யும்,
மதிமயக்கி உமையழித்து
மானமதைக் கெடுத்துவிடும்.
மதுவரக்கன் கைபிடிக்க
மனமதுவோ அதிலயிக்க,
பதியாக வாழ்பவரைப்
பாழ்படுத்த வந்ததுவே!
விதிமுடிக்க வருமுன்னே
விழித்துவிடு குடிமகனே!
அதுவுன்னை முடிக்குமுன்னே
அதனைநீ முடித்துவிடு.