சுவாசிக்கும் காற்றில்
கரியமிலவாயு நான்,
பிராணவாயு நீ!
பருகும் நீரில்
ஹைட்ரஜன் நான்,
ஆக்சிஜன் நீ!
எரியும் விளக்கில்
வெப்பம் நான்,
வெளிச்சம் நீ!
மலரும் பூவில்
மகரந்தம் நான்,
மதுவோ நீ!
நெய்யும் ஆடையில்
ஊடையாய் நான்,
உள்பாவு நீ!
கதம்ப மாலையில்
கனகாம்பரம் நான்,
கவின்மல்லி நீ!
அணியும் நகையில்
அரும்செம்பு நான் ,
ஆணிப்பொன் நீ!
சுழலும் புவியில்
சுற்றுவது நான்,
சூழ்வது நீ!